டாக்டர் மோசே DOCTOR MOSES 55-0114 வெள்ளிக்கிழமை மாலை, ஜனவரி 14, 1955 பிலடெல்பியா சபை, சிகாகோ, இல்லினாய்ஸ், அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் டாக்டர் மோசே (55-0114) உங்களுக்கு நன்றி. இனிய மாலை வணக்கம், நண்பர்களே. நாம் நின்றுகொண்டிருக்கும்போதே, ஒரு நிமிடம் நம் தலைகளைத் தாழ்த்துவோமா. 2 எங்கள் பரலோகப் பிதாவே, பாவ வாழ்க்கையிலிருந்து எங்களை மீட்டு, உம்மு டைய பிள்ளைகள் என்று அழைக்கப்பட அனுமதித்ததற்காக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். நீர் எனக்குக் கொடுத்த நண்பர்களுக்காகவும், என் சகோதரராலும் இந்த சபையாராலும் எனக்கு அளிக்கப்பட்ட இந்தப் பாராட்டுகளுக்காகவும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், இந்த ஆசீர்வாதங்களுக்கு நான் தகுதியற்றவன். ஆனால் இது: என்னைப் பாவ வாழ்க்கை யிலிருந்து தூக்கியெடுத்து, தமது கிருபையினால் என்னை இரட்சித்து, இந்த நண்பர்களை எனக்குக் கொடுத்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக. ஆண்டவரே, நீரே இதைச் செய்தீர், அதற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். மேலும், உம்முடைய ஆவியானவராலே, உம்முடைய இந்தப் பிள்ளைகளுக்கு முன்பாக நான் எப்போதும் பாத்திரவானாக நடப்பேனாக. 3 பிதாவே, அவர்கள் என்மீது வைத்தி ருக்கும் அன்பையும், நான் அவர்கள்மீது வைத்திருக்கும் அன்பையும் காண்பிப்பதற்காக, அவர்களுக்குச் சில அளவிலாவது என்னால் உதவ முடியுமாக. ஆண்டவரே, இன்றிரவு வார்த்தையைப் பிரசங்கிப்பதன் மூலமாகவோ, அல்லது நீர் எங்களைச் செய்யச் சொல்வது எதுவோ அதன் மூலமாகவோ, அது அருளப் படுவதாக. உம்முடைய பரிசுத்த ஆவியானவர் இங்குள்ள ஒவ்வொரு இருதயத்தையும் பொறுப்பேற்றுக்கொள்ளவும், உம்முடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ள எங்களுக்கு உதவவும் இப்போதே கிருபை செய்யும் ஆண்டவரே; ஆவியானவர் வார்த்தையை எடுத்து, எங்களுக்குத் தேவையானபடி ஒவ்வொ ருவருக்கும் அதை அளிப்பாராக. இயேசுவின் நாமத்தில் இதை வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 4 அமர்ந்துகொள்ளலாம். இனிய மாலை வணக்கம், என் பிரியமான நண்பர்களே. சகோதரர் ஜோசப் இப்போது எனக்கு அளித்த இந்தப் பாராட்டுக்கும், உங்கள் அன்பிற்கும், விசுவாசத்தின் உறுதிமொழிக்கும் மற்றும் பலவற்றிற்கும் நான் தகுதியற்றவன், ஆனால் நிச்சயமாக நான் இதைப் பாராட்டுகிறேன். தேவன் உங்களோடு இருப்பாராக என்பதே என் ஜெபம். நமக்கு இடையே உள்ள அந்த உணர்வை நான் ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று நம்புகிறேன். நான்... நீங்கள் என்னைப் பற்றி அவ்வாறு உணரும் வரையிலும், நான் தேவனுக்கு முன்பாகச் சரியாக வாழும் வரையிலும், நாம் எப்போதும் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போம். நம்முடைய கர்த்தராகிய இயேசு எத்தனை அற்புதங்களைச் செய்தாலும், அது சத்தியம் என்பதை அவர் எவ்வளவுதான் உறுதிப் படுத்தினாலும், நீங்கள் அதை விசுவாசிக் காமலும், என்னை நேசிக்காமலும் இருந்தால், உங்களுக்கு உதவ என்னால் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் என்னை எப்படி விசுவாசிக்கிறீர்களோ, அப்படியே நான் உங்களுக்கு உதவ முடியும். 5 சிகாகோ என்பது மிகவும் நேசத்துக்குரிய ஒரு இடமாகும். இன்று நான் சில நண்பர் களுடன் பேசிக்கொண்டிருந்தேன், அமெரிக் காவில் உண்மையான, நகரம் தழுவிய ஒரு எழுப்புதலுக்குத் தயாராக இருக்கும் ஒரு நகரம் இருப்பதாக நான் நம்பினால், அது சிகாகோதான் என்று அவர்களிடம் சொன்னேன். அது சரிதான். நான் அதை நம்புகிறேன். அற்புதமான போதகர் பில்லி கிரஹாம் 56-ஆம் ஆண்டில் வருகிறாராம், அப்படித்தான் நான் நம்புகிறேன். அவர் இங்கு வரும்போது எழுப்புதல் அதன் பாதையில் இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், அவர் அதை அப்படியே எடுத்துக்கொண்டு, இயேசு வரும்வரை வெற்றியிலிருந்து வெற்றிக்கு அதைக் கொண்டுசெல்ல முடியுமாக. 6 உங்களுக்கு ஒரு மாபெரும், நகரம் தழுவிய எழுப்புதல் தேவை; இந்த நேரத்தில் நகரத்தைச் சுற்றி, குறிப்பாக கர்த்தராகிய இயேசுவை நேசிக்கும் மக்களிடையே, ஒரு ஆழமான உணர்வு நிலவுவது போல் தெரிகிறது. இன்றிரவு உங்கள் மத்தியில் இருந்து, இந்த அற்புதமான ஐக்கியத்தை அனுபவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 7 இன்று நான் ஒரு ஒலிபரப்பைச் செய்ய வேண்டியிருந்தது, அல்லது, அது விரைவில் ஒலிபரப்பப்படும் என்று நினைக்கிறேன், சில வகையான பதிவுகள் மற்றும் பல (ஞாயிற்றுக்கிழமைக்காக என்று நம்புகிறேன், சகோதரர் ஜோசப்?), என் நல்ல நண்பரான சகோதரர் ஜோசப் மற்றும் சகோதரர் எக்பெர்க் ஆகியோருடன். 8 சொல்லப்போனால், நான் அவரை ஜோசப் என்று அழைக்கிறேன். அது வெறும்... அது அவருடைய பெயர்களில் ஒன்று, எனக்கு ஜோசப் என்ற பெயர் பிடிக்கும், அது காணப்படுகிறது... நான்-நான் அதை விரும்புகிறேன். நான் சகோதரர்-சகோதரர் ஜோசப்பை முழு இருதயத்தோடு நேசிக்கிறேன். என் நல்ல நண்பர் சகோதரர் ராஸ்முசெனை நான் சந்தித்தேன், அவர் இன்றிரவு எனக்குப் பின்னால் இங்கே அமர்ந்திருக்கிறார், இங்குள்ள உங்கள் போதகர்களில் மற்றொருவர்; அவர் வாஷிங்டனில் உள்ள டகோமாவில் இருந்தார், நாங்கள் நிச்சயமாக ஒருவரோடு ஒருவர் ஒரு ஐக்கியத்தின் நேரத்தைக் கொண்டிருந்தோம். 9 இன்று காலை, விழித்தெழுந்தபோது... நேற்றிரவு கூட்டம் எனக்கு பெரும் சிரமமாக இருந்தது, சில நாட்களில் அதுவே முதலாவது, அது இன்று காலை என்னைச் சற்று சோர்வடையச் செய்தது. அங்கு... சில நேரங்களில் மக்கள் அதைப் புரிந்துகொள்ள மாட்டார்கள், ஏன் அது அப்படி... அதை என்னாலும் விளக்க முடியாது, நண்பர்களே. அது அப்படி இருக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன், ஆனால் அது அப்படித்தான் இருக்கிறது, அது என்னால் எழுந்திருக்க முடியாத அளவுக்கு என்னை மிகவும் பலவீனமாக்குகிறது, நான் எந்த வகையிலும் ஒரு பலவீனமானவன் அல்ல, அது உங்களுக்குத் தெரியும். ஆனால்... 10 [சகோதரர் ஜோசப் மாட்சன்-போஸ் கூறுகிறார், "அங்கே உங்களுக்கு ஒரு கட்டில் இருக்கிறது."] நல்லது, இருந்தாலும் நான் அதை ஒருபோதும் பயன்படுத்த வேண்டியதில்லை என்று நம்புகிறேன். ["அதில் படுத்திருந்த சகோதரியும் இங்கே இருக்கிறார்."] நேற்றிரவு அதில் படுத்திருந்தவர் இன்றிரவு சபையார் மத்தியில் அமர்ந்திருக்கிறார் என்று சகோதரர் ஜோசப் சொன்னார். அந்தப் பெண்ணுக்கு என்ன பிரச்சினை? எங்கே...? அவர் இங்கே இருக்கிறாரா? ["சகோதரி சாட்சி சொல்லியிருக்கிறார், அவர் அங்கேயே இருக்கிறார்."] ஓ, அது மிகவும் அருமை. அவர் என்னவாக இருந்தார்...? ["அவர் டிசம்பர் எட்டாம் தேதி முதல் பதினாறாம் தேதி வரை மேயோ சகோதரர்கள் மருத்துவமனையில் இருந்தார், பின்பு அவர்கள் நம்பிக்கை இல்லாமலோ, அல்லது மிக மிகக் குறைந்த நம்பிக்கையோடோ அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். ஒன்பது மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தார்கள், அவர்களால் அவருக்கு எதுவும் செய்ய முடியவில்லை. அவர் இங்கே வந்தார், அவருடைய கணவர் இரட்சிக்கப் படாதவர். கடுமையான வலியோடு அவர் இங்கே தூக்கிக் கொண்டு வரப்பட்டார். நேற்றிரவு அவர் எப்படித் தூங்கினார் என்று நான் அவரிடம் கேட்டேன், அவர் தூங்கவே இல்லை, தான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக அவர் சொன்னார்."] அது மிகவும் அருமை. அதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 11 இது... நான் இன்னும் எந்தப் பதிவுகளையும் எடுக்கவில்லை, ஏனென்றால் அது அவசியமாக இருக்கவில்லை. யாராவது ஒருவேளை ஆலோசனை கூறலாம், அவர் களிடம் என்ன சொல்லப்பட்டது என்று, ஒரு வேளை கேட்கப்படலாம், அப்போது அந்த-அந்தப் பதிவுகள் என்னிடம் கொடுக்கப்படும், நிச்சயமாக, அவற்றின் நகல் ஒன்றும் என்னிடம் இருக்கிறது. ஆகையால், நான் அதைத் திரும்பிப் பார்க்கும்போது, சகோதரி, நான் உங்களோடு சேர்ந்து களிகூருவேன். அவர் உங்களுக்கு என்ன சொன்னாரோ, அவர் உங்களுக்கு என்ன செய்தாரோ அதற்காக நான் ஏற்கனவே மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 12 இப்போது, இந்த முறை நான் சிகாகோவில் நீண்ட நாட்கள் தங்கியிருக்கலாம் என்பதால். நான் அதைச் சற்று எளிதாக எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன்; ஒருவேளை, சில இரவுகள் பேசுவதற்கும் பீட அழைப்புகளுக்கும் (altar calls) நேரம் ஒதுக்கி, எத்தனை பேர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற முடிகிறது என்பதையும், எத்தனை பேர் கர்த்தராகிய இயேசுவிடம் வர முடிகிறது என்பதையும் பார்க்கலாம் என்று நினைத்தேன். மேலும்-பரிசுத்த ஆவியானவர் நடத்தும் விதமாக, அப்போதப்போது சுகம ளிக்கும் ஆராதனையையும் வைத்துக் கொள்ளலாம். 13 எனவே, ஒருவேளை இன்றிரவு, பரிசுத்த ஆவியானவர் நடத்துகிறபடி நான் சிறிது நேரம் பேசுவேன் என்று கருதுகிறேன். சற்று நேரத்திற்கு முன்பு என் மகன் வந்து என்னை அழைத்துச் சென்றான், ஆனால் அவன் ஜெப அட்டைகள் ஏதும் கொடுத்தானா என்பது கூட எனக்குத் தெரியாது. மேலும் நாங்கள் சகோதரர் எக்பெர்க்கைத் தவறவிட்டுவிட்டோம், முகப்பில் அவரை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை, நாங்கள்... அவர் எங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்க வேண்டியிருந்தது, மற்றும்-மற்றும் அதனால் நான்-யாரோ அவருக்கு முன்பாகவே வந்து அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால், நாங்கள் அனைவரும் இங்கே இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். 14 அந்தச் சகோதரி தூங்க முடியாத அளவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததைப் பற்றிப் பேசுகையில், அது அப்படியிருப்பது ஒரு நல்ல காரியமே. 15 எஃப். எஃப். போஸ்வொர்த்தை எத்தனை பேருக்குத் தெரியும்? உங்கள் அனைவருக்கும் தெரியும். சொல்லப்போனால், சில நாட்களில் அவர் இங்கு வருவார் என்று நான் நம்புகிறேன். அவர் இப்போதுதான் ஜப்பானிலிருந்து திரும்பியிருக்கிறார். தெய்வபக்தியுள்ள, பரிசுத்தமான முதிர்ந்த சகோதரர், அவர் எப்போதும் ஒரு பெரிய ஆசீர்வாதமாகவே இருந்திருக்கிறார். நான் நடத்திய ஏறக்குறைய அனைத்துக் கூட்டங் களிலும் அவர் என்னோடு இருந்திருக்கிறார். இப்போது, ஒரு போதகராக, பவுலைப் போல அவரால் பிரசங்கிக்க முடியாமல் இருக்கலாம், ஆனால் என்னைப் போலவே அவரும் மக்களின் இருதயத்தைப் பற்றிக்கொள்ள முயற்சிக்கிறார். 16 ஒருவேளை ஒருவர் ஒரு பெரிய, வல்லமையான செய்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, யாராவது ஒருவர் அறையின் பின்பக்கத்தில் அமர்ந்து அதை ரசித்துக்கொண்டிருக்கலாம், ஆனால் இங்கே புற்றுநோயால் மரித்துக்கொண்டிருக்கும் இந்த ஏழை மனிதன், வல்லமையான செய்தியைப் பற்றிக் கவலைப்படுவதில்லை, தான் சிக்கியுள்ள அந்தத் துயரத்திலிருந்து விடுபட ஏதேனும் வழி இருக்கிறதா என்பதை அவன் அறிய விரும்புகிறான், அந்த மனிதனிடமே சகோதரர் போஸ்வொர்த் பேசுகிறார். ஆகவே, நான் அவரை நேசிக்கிறேன், அந்த முதிர்ந்த மனிதரைச் சுற்றி இருப்பதே ஒரு ஆசீர்வாதமாகும். அவர் தேவனுடைய ஊழியக்காரர் என்பதை நான் அறிவேன், அதை நான்-நான் அறிவேன். அவர் சுற்றிலும் இருக்கும்போது, அவர் அருகே இருப்பதிலேயே நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் ஒரு... நான் அவரைக் கூட்டத்திற்கு அழைத்துச் செல்வேன், பிற்பகல் ஆராதனையை அவரை நடத்தச் செய்வேன், சரி, அவ்வளவுதான். எங்களுக்கு ஒரு... இப்போது, நான் மேடையை விட்டு இறங்கியவுடனே, யாருக்காவது ஜெபம் செய்யப்படாமல் இருந்து, ஜெபிக்க விரும்பினால், அந்தச் சமயத்திலேயே அதைச் செய்வதற்குச் சகோதரர் போஸ்வொர்த் ஆயத்தமாக இருப்பார், அவர் அற்புதமான முடிவுகளைப் பெறுகிறார். எழுபத்தெட்டு வயதாகிறது, அவர் பதினாறு வயதில் இருந்ததைப் போலவே இப்போதும் இளமையாக இருக்கிறார். 17 ஒருமுறை அவர் என்னிடம் சொன்னார், சகோதரியே, நான் கேட்டேன், "சகோதரர் போஸ்வொர்த், நீங்கள் இவ்வளவு வயதான பிறகும் எப்படி இப்படி இருக்கிறீர்கள்," என்றும், "நீங்கள் எப்படி இன்னும் இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள்?" என்றும் கேட்டேன். அதற்கு அவர், "நீங்கள் தவறாகப் புரிந்துகொள்கிறீர்கள், சகோதரர் பிரன்ஹாம், நான் இந்தப் பழைய வீட்டில் வசிக்கும் ஒரு குழந்தை மட்டும்தான்," என்று அவர் கூறினார். அது மிகச் சிறந்த ஒரு வெளிப்பாடாகும். 18 சில நாட்களுக்கு முன்பு நான் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, "ஜப்பானில் நீங்கள் நடத்திய அந்த மாபெரும் நற்செய்திக் கூட்டத்திலிருந்து திரும்பிய பிறகு, சகோதரர் போஸ்வொர்த், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர் கூறினார், "சகோதரர் பிரன்ஹாம், அதே பழைய தொல்லை எனக்கு மீண்டும் வந்துவிட்டது." நான், "என்ன தொல்லை?" என்று கேட்டேன். "மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதனால் தூங்க முடியவில்லை," என்று அவர் கூறினார். எனவே, உங்களுக்குத் தெரியும், அவர் மிகவும் நல்ல, முதிர்ந்த சகோதரர். 19 எனவே, உங்களுக்கு எழுபத்தெட்டு வயதாகும்போதும் அதே தொல்லை உங்களுக்கு இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதனால் தூங்க முடியவில்லை என்ற அந்தத் தொல்லை. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரி, மேலும் சுகமடைந்த உங்களில் மற்ற அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. 20 பில்லியும், சில சமயங்களில், மற்ற சில சகோதரர்களும் எனக்கு மேற்கோள் காட்ட முயல்வார்கள், "நீங்கள் 'நான் ஏதோ கனவு கண்டேன்' என்று பேசத் தொடங்கும்போது, அது என்னவென்று எனக்குச் சரியாக நினைவில் இல்லை என்பது போல் எனக்குத் தோன்றுகிறது." மேலும் இது முற்றிலும் ஒரு உள்மனச் செயலாகும், மனிதன் விலகிப்போய் தேவன் அவன் இடத்தைப் பிடிக்கும்போது அது நிகழ்கிறது. அதுதான்-அவ்வளவுதான். 21 உங்களுக்குத் தெரியும், தேவன் முதன் முதலில் இயேசு என்னும் ஒரு மனிதருக்குள் வாசம் செய்தார். அவர், தமது இரத்தத்தைச் சிந்துவதன் மூலமாக... பாருங்கள் முதல் காரியம் ஒரு இரத்த அணுவாகும், அதிலிருந்தே நாம் அனைவரும் வந்திருக்கிறோம், அந்த இரத்த அணுவிற்குள் ஒரு ஜீவன் இருக்கிறது, அந்த ஜீவன் ஒரு ஆவியாகும். சர்வ வல்லமையுள்ள தேவன் இந்தக் கன்னிகையின் கர்ப்பத்திற்குள் சென்று, தம்மைச் சுற்றி ஒரு இரத்த அணுவை உருவாக்கினார், அதுவே குமாரனாகிய கிறிஸ்து இயேசுவை வெளிக்கொண்டு வந்தது. கல்வாரியில், அந்த இரத்த அணு வெடித்து ஒரு தெளிப்பாக மாறியது, புதிதாய் பிறக்கிற ஒவ்வொரு மனிதனும் இந்தத் தெளிப்பின் மூலமாகவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரத்திற்குள் வருகிறான், நாம் இரத்தத்தினால் கழுவப்பட்டு, ராஜ்யத்தில் இயேசுவுக்கு நிகரான தேவனுடைய குமாரனாக மாறுகிறோம். 22 ஒருநாள் நாம் அங்கே சிங்காசனத்தில் அவரோடு அமருவோம். "நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங் கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படி செய்வேன்" என்று அவர் கூறினார். நாம் அவரைக் காணும்போது அது எப்பேர்ப்பட்ட மகிமையான நாளாக இருக்கும்! 23 இப்போது, நாளை இரவு, இங்குள்ள ஆசரிப்புக் கூடாரத்தில் நடைபெறும் கூட்டத்தின் நிறைவு என்று நம்புகிறேன், அதன் பிறகு நாம் லேன் டெக் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வோம். நேற்றிரவு நான் அங்கே வாசலில் நின்றுகொண்டிருந்தபோது, பிற்பகலில் ஒரு ஆராதனை இருக்கும் என்று சகோதரர் ஜோசப் சொன்னதை நான் புரிந்துகொண்டேன் என்று நம்புகிறேன். கர்த்தருக்குச் சித்தமானால், நாளை இரவும், அத்துடன் ஞாயிறு பிற்பகலிலும் பிரசங்கிப்பது குறித்த ஒரு தலைப்பை நான் அணுக விரும்புகிறேன். 24 இப்போது, சாட்சிகள் அற்புதமானவை, அல்லவா? சில நிமிடங்களுக்கு முன்பு நான் ஆய்வு அறையிலிருந்து வெளியே வந்து, வளைவில் திரும்பியபோது, ஒரு கவர்ச்சியான, இளம் பெண், அறையில் நின்று கொண்டி ருந்தாள், அவள், "உங்களுக்கு என்னை நினை வில்லையா?" என்று கேட்டாள். நிச்சயமாக, நான் ஜெபித்துக்கொண்டிருந்தேன், நான் கொஞ்சம் நிமிர்ந்து பார்த்து, "எனக்கு உங்களைத் தெரிந்திருக்கும் என்று தோன்று கிறது" என்றேன். அவள், "ஹம்மண்டில் சுகமடைந்தவள் நான்தான்" என்றாள். அவள் குடிக்கு அடிமையானவளாக இருந்தாள், அவள் சுகமடைந்தாள். 25 அவள் வெளியே அழைக்கப்பட்டாள், அந்தப் பெண்ணின் சாட்சியைப் பற்றி எனக்கு நன்றாக நினைவிருப்பது என்னவென்றால், அவள் மேல்மாடத்தில் ஏதோ ஒரு இடத்தில் அமர்ந்திருந்தாள். மேடையில் ஒரு பெண் இருந்தாள், அவள் ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞர், ஃப்ரெட் அஸ்டேருடன் ஆடும் ஒரு நடனக் கலைஞர். அவள் தேவனை விட்டு விலகிச் சென்றிருந்தாள், அவள் ஒரு கத்தோலிக்கரை மணந்திருந்தாள், அவளுடைய வீடு உடைந்துவிட்டது, அவளுக்கு அவன் மூலமாக ஒரு சிறு பையன் இருந்தான், மேலும், ஓ, அவள் ஒரு போதைப்பொருளுக்கு அடிமையாக அல்லது அதுபோன்ற ஒன்றாக மாறியிருந்தாள். முதலில் அது எதிர்க்கப்பட்டது என்பதை நான் அறிவேன், ஆனால் பரிசுத்த ஆவியானவர் எப்போதும் சரியானவர், அது சரியாகவே இருந்தது. மேலும், அதே இரவில்தான் என்று நான் நம்புகிறேன், பரிசுத்த ஆவியானவர் இண்டியா னாவிலுள்ள ஹம்மண்டில் மேல்மாடம் வரை சென்று, இந்தப் பெண் குடிக்கு அடிமை யானவள் என்று அவளிடம் கூறினார். என்னுடைய நினைவின்படி, டேப்பில் அது அப்படித்தான் இருந்தது என்று நான் நம்புகிறேன். 26 இன்றிரவு, அவள் அந்த வழியே சென்றாள், அவள் இப்போது கட்டடத்தில் எங்காவது இருக்கலாம், அநேகமாக என்னைக் கேட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால், அவளுக்கு ஒரு அருமையான சாட்சி இருந்தது, எப்போதுமே அலுவலகத்தின் மூலமாக மற்றும் பல வழிகளில் அவளிடமிருந்து நாங்கள் செய்திகளைக் கேட்கிறோம், அவள் கடிதங்கள் எழுதுகிறாள், அவ்வப்போது சில தசம பாகங்களை அனுப்புகிறாள், அதுபோன்ற காரியங்களைச் செய்கிறாள், மிகவும் அன்பான நபர். 27 பின்னர் இன்று காலை கடிதங்களைப் படித்தபோது, உங்களில் பலர் கடிதங்கள் எழுதியிருக்கிறீர்கள், தேவனுடைய வார்த்தை யைத் திறப்பதற்குச் சற்று முன்பாக நான் இங்கே ஒன்றைப் படித்து, உங்களுக்கு ஒரு படத்தைக் காட்ட விரும்புகிறேன். அந்த நபர் ஒருவேளை இங்கே இருக்கலாம். கடிதம் முழுவதையும் நான் படிக்க மாட்டேன், ஏனென்றால், சாட்சிக்குத் தொடர்பு டையதை மட்டுமே படிப்பேன், காரணம் கடிதத்தில் அந்த நபர் யாருக்காகவோ என்னிடம் ஜெபிக்கச் சொன்னது அவர்கள் சொல்ல விரும்பாத ஒன்றாக இருக்கலாம். இது ஜனவரி பன்னிரண்டாம் தேதி. "அன்புள்ள சகோதரர் பிரன்ஹாம்: நமது அற்புதமான கர்த்தரின் நாமத்தில் வாழ்த்துகள். நீங்கள் இங்கே சிகாகோவில் இருந்தபோது, உங்கள் கடந்த எழுப்புதலில், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த என் பேத்திக்காக நான் ஒரு துணியைக் கொண்டுவந்தேன், நீங்கள் அதன்பேரில் ஜெபித்தீர்கள், ஏனெனில் அவளுடைய தாயையும் தந்தையையும் என்னால் தேவாலயத்திற்குக் கொண்டுவர முடியவில்லை. அவள், அவளுடைய தாய், இரட்சிக்கப்படாத ஒரு கத்தோலிக்கர், அவளுடைய தந்தையும் இரட்சிக்கப்படாதவர். இந்தச் சிறு குழந்தைக்கு ஐந்து மாதங்கள் ஆகின்றன, அது தன்னுடைய பெரும்பாலான நேரத்தை மருத்துவமனையிலேயே கழித்தது. ஆனால், இறுதியாக, நீங்கள் ஜெபித்த அந்தத் துணியைக் குழந்தையின் மீது வைக்க நான் அவர்களைச் சம்மதிக்க வைத்தேன், தேவன் உடனடியாக அதைச் சுகமாக்கினார். அதன் பிறகு அவள் ஒருபோதும் மருத்துவமனைக்குச் செல்லவில்லை, இப்போது ஒரு அழகான, ஆரோக்கியமான குழந்தையாக இருக்கிறாள்." 28 அவள் அந்தச் சிறு குழந்தையின் படத்தை அனுப்புகிறாள். ஆயிரக்கணக் கானவற்றில், சிகாகோவில் இருந்த இது, உலகம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான சாட்சிகளில்... 29 நண்பர்களே, உங்களுக்குத் தெரியும், தெய்வீக சுகமளித்தலைப் பற்றி உலகம் சொல்லும் அனைத்து விமர்சனங்களோடும், உலகின் விமர்சகர்களை நான் எதிர்கொள்ள வேண்டியிருந்தால், களத்தில் இருந்த இந்த இருபத்து மூன்று ஆண்டுகளிலும், எழுப்புதல் சுகமளிக்கும் ஊழியத்தில் இருந்த இந்த எட்டு ஆண்டுகளிலும், எனது ஊழியத்தில் வேறு எங்கும் எதுவும் நடக்காமல் இது மட்டுமே நடந்திருந்தால், அது எனக்கு இருமடங்காகப் பலனளித்திருக்கும். யாரோ ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஒரு மருத்துவரால் காப்பாற்ற முடியாத ஒரு சிறு குழந்தையின் உயிர், எதுவும் செய்ய முடியவில்லை, மூளை முடக்குவாதம் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும், தேவன் உதவாவிட்டால் அது முடிந்துவிட்டது என்பது உங்களுக்குத் தெரியும், அவளின் மீது ஒரு கைக்குட்டையை வைத்ததன் மூலமாக சர்வவல்லமையுள்ள தேவனின் வல்லமையினால் அவள் உடனடியாகச் சுகமடைந்தாள். நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்! 30 அம்மா, நீங்கள் இங்கே இருந்தால், குழந்தையின் பாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அந்தச் சிறு குழந்தை எப்போதும் நலமாக இருக்கும் என்றும், தேவனுடைய ஒரு சிறந்த ஊழியக்காரராக வரும் என்றும் நான் நம்புகிறேன். அதில் இருந்த உங்களுடைய சிறிய காணிக்கைக்கு நன்றி. 31 மேலும், இங்கே ஒரு கடிதம் இருக்கிறது, இதைப் படிக்க நான் நேரம் எடுத்துக்கொள்ள மாட்டேன், இதை உங்களுக்கு மேற்கோள் காட்டுகிறேன், இது ஒரு சாட்சி. நான் அறையிலிருந்து வெளியே வரும் போதுதான் இவற்றை எடுத்தேன். மிச்சிகனில் உள்ள பென்டன் ஹார்பர் கூட்டத்திற்கு அல்லது இங்கே மேலே எங்கோ வந்த ஒரு இளம் பெண் என்று நம்புகிறேன், அவள் இங்கே சிகாகோவில்தான் பிறந்தாள்... [ஒலிநாடாவில் காலியிடம்] 32 நல்லது, உங்களுக்கு என்ன தெரியும்? ஏறக்குறைய-ஏறக்குறைய இரண்டு டஜன் பேர் இதற்கு முன்பு ஒரு கூட்டத்தில்கூட இருந்ததில்லை. கர்த்தராகிய இயேசுவின் மீது அன்புகொண்ட எங்கள் பிரியமான நண்பர்களே, உங்களை நாங்கள் நிச்சயமாக வரவேற்கிறோம். அவரை மேன்மேலும் நேசிக்கும்படி அவரு டைய ஆவியானவர் இன்றிரவு உங்களையும் உங்கள் உணர்வுகளையும் பெரிதும் தூண்டுவாராக. 33 இப்போது, இது எப்போதும், அடிப்படையாகவே, தேவனுடைய சரியான வார்த்தையாகிய வேதாகமமாகும், அதன் ஒவ்வொரு பகுதியும் ஏவப்பட்டதாகும். அது முழுவதும் தேவனுடைய வார்த்தை, தேவன் தமது வார்த்தையில் இருக்கிறார், ஆகவே தேவன் தமது வார்த்தையில் இருந்தால், நீங்கள் அந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ளும்போது, நீங்கள் தேவனை ஏற்றுக்கொள்கிறீர்கள். இப்போது அதுவே தேவனுடைய திட்டம், தேவனுடைய நோக்கம், தேவனுடைய மன நிலை, தேவனுடைய அன்பு, தேவனுடைய இரட்சிப்பு; எல்லாமே அவருடைய அச்சிடப் பட்ட வார்த்தையில் தங்கியிருக்கிறது. அந்த வார்த்தைகள் நீங்கள் எடுத்து விழுங்கக்கூடிய தானியங்கள் அல்லது விதைகளைப் போல் இருந்தால், அவை ஒவ்வொன்றும் அது இங்கே என்ன செய்யும் என்று சொல்கிறதோ அதை அப்படியே சரியாக உருவாக்கும். ஆனால் விசுவாசத்தினாலே நாம் அவற்றை ஏற்றுக்கொள்கிறோம். 34 இப்போது, சிறிது காலத்திற்கு முன்பு யாரோ என்னிடம் கேட்டார்கள், "சகோதரர் பிரன்ஹாம், அந்தத் தரிசனங்கள் வரும்போது, அது தேவனுடைய எந்தப் பகுதி?" 35 நான் கூறினேன், "அது இரண்டாவதாக தேவனுடைய வார்த்தையாகும். இந்த வேதாகமத்தின்படி இல்லாத ஒன்றை அது சொன்னால், அது முற்றிலும் தவறானதாக இருக்கும், இதுவே முதலாவது." 36 இப்போது, இது தேவன், "நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்" என்று அவர் சொன்னார். அப்படியானால் எல்லாச் சுகமளித்தலும் தேவனி டமிருந்தே வருகிறது, அவரே சுகமளிக்கிறவர். எல்லாத் தெய்வீக வாக்குத்தத்தங்களும் தேவனி டமிருந்தே வருகின்றன, ஏனெனில் அது உங்களுக்கும் எனக்கும் உரிய அவருடைய வார்த்தை. 37 ஆனால் இப்போது, ஒருவேளை, விசுவாசிக்கக்கூடிய அந்த விசுவாசத்தின் நிலைக்கு உயர முடியாத ஒரு நிலை இங்கே இருக்கிறது... அதைச் செய்வது கடினம் என்பது உங்களுக்குத் தெரியுமா? சில நேரங்களில் நம்முடைய உணர்ச்சிகளில் நாம் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளக்கூட முயற்சிக் கிறோம், ஆனால் அதற்காக நாம் இரட்சிக்கப் பட்டுவிட்டோம் என்று அர்த்தமல்ல. 38 நீங்கள் கூறுகிறீர்கள், "சரி, நான் விசுவாசிக்கிறேன்." 39 சாத்தானும் அதைச் செய்கிறான். அதற்காக நீங்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டீர்கள் என்று அர்த்தமல்ல. நீங்கள் இரட்சிக்கப் படும்போது, உங்கள் இரட்சிப்பின் முத்திரை யாகிய பரிசுத்த ஆவியின் அபிஷேகம் உங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. "ஆபிரகாம் விசுவாசத்தினாலே தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது," ஆனால் தேவன் அவனுடைய விசுவாசத்திற்கு ஒரு முத்திரையாக அல்லது உறுதிப்படுத்தலாக விருத்தசேதனத்தை அவனுக்கு அளித்தார். விசுவாசம் சரியானது. புரிகிறதா? 40 ஒரு-ஒரு ரொட்டித் துண்டின் மதிப்பு-பத்து சென்ட் என்று வைத்துக்கொள்வோம். சரி, இங்கே ஒரு டைம் (பத்து சென்ட் நாணயம்) இருக்கிறது. நல்லது, அது ரொட்டித் துண்டு அல்ல, ஆனால் அந்தப் பத்து சென்ட்டைக் கொண்டுதான் நான் ரொட்டியை வாங்குகிறேன். எனவே, விசுவாசத்தினால்தான் நான் இரட்சிப்பை வாங்குகிறேன். விசுவாசம் என்பது இரட்சிப்பு அல்ல, விசுவாசம் இரட்சிப்பை வாங்குகிறது. விசுவாசம்... அந்த பத்து சென்ட் நாணயம் ரொட்டித் துண்டுக்கான விலையைக் கொடுத்தது, ஆனால் அந்த நாணயம் ரொட்டித் துண்டு அல்ல. புரிகிறதா? ஆகவே நீங்கள் தேவனை விசுவாசிக்கிறீர்கள், மேலும் உங்கள் விசுவாசம் எதை உருவாக்குகிறதோ அதை உங்களுக்குத் திரும்ப அளிப்பதன் மூலம் தேவன் உங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்துகிறார். நீங்கள், "சுகமடைவதற்கான விசுவாசம் என்னிடம் இருக்கிறது" என்று கூறுகிறீர்கள். உங்களிடம் அது இருந்தால், நீங்கள் சுகமடைந்துவிட்டீர்கள், தேவன் தம்முடைய வார்த்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறார். அதை நீங்கள் காண்கிறீர்களா? 41 நீங்கள், "நான் இரட்சிக்கப்பட்டேன் என்று விசுவாசிக்கிறேன்" என்று சொன்னால், அதை உறுதிப்படுத்த தேவன் உங்களுக்கு பரிசுத்த ஆவியானவரைத் தருகிறார், பரிசுத்த ஆவியானவரின் சாட்சியைத் தருகிறார், அது சரிதான், உங்கள் இருதயத்தில் ஒவ்வொரு பாவமும் அகன்று போகிறது, இருள் பகலாக மாறுகிறது, பழைய மனுஷன் ஒழிந்து போகிறான், நீங்கள்-நீங்கள் உண்மையிலேயே விசுவாசிக்கும்போது ஒரு புதிய மனுஷன் மறுபடியும் பிறக்கிறான். 42 ஆனால் நீங்கள், "நான் விசுவா சிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு, பின்பு எதுவும் நடக்காமல், அதே வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்ந்து கொண்டு, வெறுமனே, "நான் சபையில் சேர்ந்துவிட்டேன்" என்றால், அவர் அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள வில்லை. பார்க்கிறீர்களா? ஆனால் அவர் அதை ஏற்றுக்கொண்டபோது, உங்களுக்கு ஏதோ ஒன்று நடந்தது, பின்பு நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாக மாறுகிறீர்கள். 43 தெய்வீக சுகமளிப்பதைக் குறித்தும் அதே காரியம்தான், நீங்கள், "நான் தெய்வீக சுகம ளிப்பதை விசுவாசிக்கிறேன்" என்று சொல்கி றீர்கள். நல்லது, பின்பு நீங்கள் அதை ஏற்றுக் கொள்கிறீர்கள், ஏதோ ஒன்று நடக்கிறது, நீங்கள் உண்மையிலேயே விசுவாசித்தால், ஏதோ ஒன்று நடக்கும். நீங்கள் விசுவாசிக்காவிட்டால்... 44 இப்போது, கர்த்தருக்காக நான் செய்யும் வேலை என்னவென்றால், அந்த நபரின் விசுவாசம் எதிர்மறையாக இல்லாமல், நேர் மறையாக மாறும் இந்த நிலைக்கு அவர்களைக் கொண்டுவர முயற்சிப்பதே ஆகும். நான் சொல்வது என்னவென்று பார்க்கிறீர்களா? 45 இப்போது, சீஷர்களால் இயேசுவை நம்புவது கடினமாக இருந்தது. அவர் பல விடுகதைகளைப் போதித்தார், அவர் ஒரு வழியில் போதிப்பார், பின்பு வேறொரு வழியில் திரும்புவார், அவர் தமக்குத்தாமே முரண்படுவது போலவும், மற்றும் எல்லாம் அப்படியே தோன்றும். ஆனால் அவர்களால் அந்த உவமைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை, மேலும்-மேலும் யாராலும் அவரைப் புரிந்துகொள்ள முடிவதுபோல் தெரியவில்லை. சரியாக, அவருடைய ஊழியத்தின் கடைசி கட்டத்தை நோக்கி, யோவான் சுவிசேஷம் 15-ம் அதிகாரத்தில் என்று நான் நம்புகிறேன், அவர்கள், "இதோ, இப்பொழுது நீர் உவமைகளாய் பேசாமல், வெளிப்படையாய்ப் பேசுகிறீர். நீர் தேவனி டத்திலிருந்து வந்தீர் என்று இப்போது நாங்கள் அறிந்திருக்கிறோம், எந்த மனுஷனும் உமக்கு எதையும் சொல்ல வேண்டியதில்லை என்பதையும் நாங்கள் அறிந்திருக்கிறோம்" என்றார்கள். பார்க்கிறீர்களா? சரி. "நீர் தேவனிடத்திலிருந்து வந்தீர் என்பதை இதினாலே நாங்கள் அறிந்திருக்கிறோம்." இயேசு, "இப்பொழுது நீங்கள் விசுவாசிக் கிறீர்களா?" என்றார். பார்க்கிறீர்களா? பார்க்கிறீர்களா? 46 அவர் செய்ததை அவர்களுடைய விசுவாசம் கண்டிருந்தது, ஆவியானவரின் வெளிப்பாட்டினால் சில பெரிய வெளிப் படுத்துதல்கள் அறியப்பட்டன, அப்போது அதை பெற்றுக்கொள்வதற்காக அவர்களுடைய விசுவா சம் இந்த இடத்திற்கு உயர்த்தப்பட்டது. "நீர் தேவனிடத்திலிருந்து வந்தீர் என்று இப்போது நாங்கள் நிச்சயித்திருக்கிறோம்." பார்க்கிறீர்களா? "இப்போது நாங்கள் விசுவாசிக்கிறோம்." 47 எவ்வளவோ... எவ்வளவோ உளவியல், அது எதையும் குறிக்கவில்லை. நல்லது, அது எதையும் குறிக்கவில்லை என்று நான் சொல்லவில்லை, என்னை மன்னியுங்கள், அது உதவுகிறது, உளவியல், ஆனால் அது எதார்த்தத்தின் இடத்தை எடுத்துக்கொள்ளாது. அது சரிதான். உளவியல் என்பது நீங்கள் நினைக்கும் ஒன்றோ, அல்லது மனதளவில் உந்தப்படும் ஒன்றோ ஆகும், ஆனால் எதார்த்தம் என்பது உங்கள் உளவியலை உறுதிப் படுத்துவதற்காக தேவன் அதைத் திரும்ப வைப்பதாகும். அது கொண்டுவருகிறது... 48 "விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாய் இருக்கிறது." அது உங்களுக்கு உறுதிப்படுத்தப் படும்போது, அது உண்மையிலேயே ஒரு சாட்சியாக, நேர்மறையான ஒரு காரியமாக இருக்கிறது. 49 யோவான் சுவிசேஷ புத்தகம் 3-ம் அதிகாரத்தில், சில வசனங்களை வாசிக்கிறேன். இதைக் கவனியுங்கள்: யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம்... (நீங்கள் அதை எப்படி அறிந்திருக்கிறீர்கள்?) நீர் தேவனிடத் திலிருந்து வந்த போதகர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். (ஆனாலும் அவர் அவர் களுடைய அனைத்து இறையியலுக்கும், அவர்க ளுடைய அனைத்து போதனைகளுக்கும் எதிராக இருந்தார், அவர் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, தேவனிடத்திலிருந்து வந்த தெளிவான சத்தியத்தைப் போதித்தார்.) நாங்கள் அறிந்திருக்கிறோம்... நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர்: ஏனெனில் தேவன் தன்னுடனேகூட இராவிட்டால், ஒருவனாலும் நீர் செய்கிற இந்த அற்புதங்களைச் செய்யமுடியாது. 50 அப்படித்தான் அவர்கள் அறிந்திருந் தார்கள், அவர் தேவனுடைய குமாரன் என்பதை அறிந்து கொள்ளும் ஒரு இடத்திற்கு அவர்க ளுடைய விசுவாசத்தைக் கொண்டுவரும்படியாக இயேசு ஏதோவொன்றைச் செய்தார். 51 இப்போது சபை இறையியலை மட்டுமே போதிக்கிறது என்றால், அது சரியா இல்லையா என்பதை நீங்கள் எப்படி அறிவீர்கள்? ஆனால் தேவன் அந்தச் சபையில் கிரியை செய்யும் போது, விசுவாசத்தை ஒரு இடத்திற்கு கொண்டுவரும்போது, நீங்கள் அப்போது அறிந்துகொள்வீர்கள். தெய்வீக சுகமளிப்பதும் அதே வழியில்தான் செயல்படுகிறது. 52 இப்போது, 14-ம் வசனத்தில் இருந்து தான் நான் சில நிமிஷங்கள் பேச விரும்புகிறேன்: வெண்கல சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல, மனுஷ குமாரனும் உயர்த்தப்படவேண்டும்: 53 இயேசு, இதைப் புரிந்துகொள்ளாத இந்த வல்லமையான அதிகாரியிடம் பேசிக் கொண்டி ருந்தார், மேலும் தாம் பேசிக்கொண்டிருந்த காரியத்திற்கு வேதப்பூர்வமான ஆதாரமாக பழைய ஏற்பாட்டை அவர் கொடுத்துக் கொண்டிருந்தார். இயேசு தமது உபதேசத்தில் மிகவும் அடிப்படையானவராக இருந்தார், ஆனால் அது அந்த உபதேசத்தின் அவர் களுடைய இறையியலுக்கு எதிராக இருந்தது. அவர்களுடைய இறையியலில் அவர்கள் மிகவும் வைதீகமானவர்களாக இருந்த போதிலும், அவர் கள் விசுவாசித்தார்கள், தாங்கள் விசுவாசித்த காரியத்தில் மிகவும் அதிகப்படியான விசுவாசிகளாக இருந்தார்கள், ஆனால் சத்தியம், அவர்களிடம் இல்லை. 54 வேதம் சொல்கிறது, "மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு," அது ஒவ்வொரு வகையிலும் செம்மையாகத் தோன்றலாம், "அதின் முடிவோ மரண வழிகள்." எனவே நாம் சரியாக இருக்கிறோம் என்பதை நாம் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். எல்லா காலங்களிலும் அது சரியா அல்லது தவறா என்பதை தேவன் எப்படி அறிந்திருந்தார் என்றால், அவர் அதை மெய்ப்பித்தார், அவர் அதை நிரூபித்தார். 55 அதிக நாட்களுக்கு முன்பல்ல, சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு, நான் ஒரு மனிதனிடம் பேசிக்கொண்டிருந்தேன், அவர் சொன்னார், "நல்லது, தேவன் பழைய ஏற்பாட்டு காலத்தில் வியாதியுள்ளவர்களைக் குணமாக்கினார்," ஆனால் சொன்னார், "புதிய ஏற்பாட்டிலும், அவர் வியாதியுள்ளவர்களைக் குணமாக்கினார்," ஆனால் இப்போது அது-அது அப்படி இல்லை என்றார். அதற்கு நான், "வியாதியுள்ளவர்களைக் குணமாக்க அவர் அவர்களுக்கு வல்லமையைக் கொடுத்தார் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?" என்றேன். "ஆம்." "அவருடைய வார்த்தையின் மூலமாகவா?" "ஆம்." நான் சொன்னேன், "அவர் அதை அவர்களிடம் இருந்து எடுத்துக்கொண்டார் என்று வேதம் எப்போது சொன்னது? நீங்கள்... அது எங்கே வந்தது என்று என்னால் உங்களுக்குக் காட்ட முடியும், அது எங்கே கொடுக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள், இப்போது அது எங்கே எடுத்துக்கொள்ளப்பட்டது என்பதை எனக்குக் காட்டுங்கள், அப்போது நான் அதை விசுவாசிக்கிறேன்." 56 ஆனால் அவர் சொன்னார், "உலகத்தின் முடிவுபரியந்தமும் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன். நான் செய்யும் கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். ஏனெனில் உலகத்தின் முடிவுபரியந்தமும் நான் உங்க ளுடனேகூட, உங்களுக்குள்ளேயும் இருப்பேன்." 57 இப்போது, இயேசு பேசி அவர்களுக்கு ஒரு-ஒரு-ஒரு-ஒரு உவமையை, அல்லது ஒரு வகையில் அது ஒரு தீர்க்கதரிசனம் என்று நான் சொல்வேன், மற்றொரு வகையில் அது ஒரு உதாரணமாக இருந்தது, அவர் சொன்னார், "சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல." 58 நம்முடைய சிந்தனைகளை நிலை நிறுத்துவதற்காக நாம் சில நிமிஷங்கள் இஸ்ரவேல் புத்திரர்களிடம் திரும்பிச் செல்வோம். மேலும் பரிசுத்த ஆவியானவர் நம்மை எதை உற்றுநோக்கச் செய்வார் என்பதை நாம் விரைந்து காண்போம். இந்தக் காரியங்கள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை அல்ல, நான் இங்கே வந்து ஒரு வேதப்பகுதியை வாசிக்கிறேன், அது எங்கே செல்கிறதோ, அங்கேதான் அது செல்கிறது. 59 இப்போது நான், இஸ்ரவேல் நானூறு ஆண்டுகள் அடிமைத்தனத்தில் இருந்ததைப் பற்றி-பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் நானூறு ஆண்டுகள் அங்கே இருந்தார்கள், இதைக் கவனியுங்கள்: இந்த நானூறு ஆண்டு கால அடிமைத்தனத்தில், இந்த நானூறு ஆண்டுகளாக தேவன் அவர்களுக்காக ஏதேனும் செய்ததாக ஒரு வார்த்தை கூட எழுதப்படவில்லை. ஏன்? 60 அவர்களுக்கு இருந்த கடைசி தீர்க்கதரிசி யோசேப்பு ஆவார். யோசேப்பு, சில காரியங்களைச் செய்வதற்காகவும், தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காகவும் தேவனால் உலகத்தில் பிறப்பித்த ஒரு மனிதராக இருந்தார். 61 "கிருபைவரங்களும் அழைப்பும் மனமாறுதல் இல்லாதவைகளாம்." தள்ளுவதற்கு எதுவும் இல்லாத ஒருவருக்குள் நீங்கள் வெறுமனே எதையும் தள்ளிவிட முடியாது. மனுஷனால் ஒன்றும் செய்ய முடியாது. தேவன் தமது தெரிந்துகொள்ளுதலில் உலகத்தோற் றத்திற்கு முன்பாகவே சில காரியங்கள் நடக்கும்படியாகத் தெரிந்துகொண்டிருக்கிறார். அதனால்தான் முடிவில் என்ன நடக்கும் என்பதை அவரால் ஆரம்பத்திலிருந்தே அறிய முடிகிறது, ஏனென்றால் அவர் அதை ஏற்கனவே ஒழுங்குபடுத்தி வைத்திருக்கிறார், அது அந்த இடத்திற்கு வந்துதான் ஆக வேண்டும். 62 இப்போது யோசேப்பு, அவர் பிறந்தபோது, ஒரு ஆவிக்குரிய மனிதராக, ஒரு தீர்க்கதரிசியாக, தரிசனம் காண்பவராக, ஒரு சொப்பனக்காரராக, சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்பவராக, ஆவிக்குரியவராக இருந்தார். அவர் தமது சகோதரர்களால் வெறுக்கப்பட்டார், அவரது தகப்பனால் நேசிக்கப்பட்டார், கிறிஸ்துவின் ஒரு பரிபூரண நிழலாக இருந்தார், அவர் ஆவிக்குரியவராக இருந்தபடியால் அவர்கள் முகாந்தரமில்லாமல் அவரை வெறுத்தார்கள். மேலும் ஒரு மிகவும்... 63 எல்லா வேதவாக்கியங்களுக்கும் ஒரு கூட்டு அர்த்தம் உண்டு, அல்லது அது சுழற்சிகளில் ஓடுகிறது. உதாரணமாக, மத்தேயு சுவிசேஷத்தில், அது அங்கேயே சொல்லப் பட்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன், "எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்." இப்போது, மத்தேயு குறிப்பிட்ட அந்த வேதவாக்கியம் உண்மையில் இஸ்ரவேலுடன் தொடர்புடையதாக இருந்தது. தேவன், "எகிப்திலிருந்து, என் குமாரனாகிய இஸ்ரவேலை நான் அழைக்கிறேன்" என்றார். அவர் இஸ்ரவேலைத் தமது குமாரனாக வெளிவர அழைத்திருந்தார், ஆனால் அது இயேசுவையும் குறித்தது, "எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்." அது எப்படி மீண்டும் சுழன்று வருகிறது என்பதைப் பார்க்கிறீர்களா? 64 காலத்தின் சுழற்சி அடிக்கடி மீண்டும் சுழன்று வருகிறது. வரலாறு தன்னைத்தானே திருப்பிச் சொல்கிறது, மேலும் காலம் முழுவதும் வேதவாக்கியம் தன்னைத்தானே திருப்பிச் சொல்கிறது, வேதவாக்கியம் எப்படித் தன்னைத்தானே திருப்பிச் சொல்லும், எப்படி அதுபோல சுழற்சிகளில் ஓடும் என்பதைக் காண ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் அதை எப்போதாவது படித்திருக்கும் எந்தவொரு அறிஞரும் அதை அறிவார், அது நிச்சயமாக அப்படிச் செய்கிறது. 65 இப்போது, யோசேப்பு ஆவிக்குரியவராக இருந்தபடியால் அவருடைய சகோதரர்கள் முகாந்தரமில்லாமல் அவரை வெறுத்தார்கள் என்பது, இன்று சபை என்று அழைக்கப் படுவதன் ஒரு நிழலாக இருக்கிறது. மெத்தடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பிடீரியன், பெந்தெகோஸ்தே, பரிசுத்த சபை (Holiness), மற்றும் அனைத்தும் சேர்ந்த பலவிதமான பிரிவுகள், இந்தச் சபைகளின் பெயரளவு, வெதுவெதுப்பான அங்கத்தினர்களை வெறுக் கின்றன, அவர்கள் அனைவரும் அப்படிப் பட்டவர்கள் அல்ல, அவர்களில் அநேகர் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் வந்த மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள், ஆனால் வெறுமனே சாதாரணமான, பெயரளவு கிறிஸ்தவராக இருக்கும் நபர்கள், தேவனால் ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மூலம் ஒருபோதும் மெய்ப்பிக்கப்படாத, தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று வெறுமனே அறிக்கையிட்டவர்கள்... வல்லமை, சுகமளித்தல் மற்றும் இரட்சிப்பின் உண்மையான அர்த்தம் என்ன என்பதை நீங்கள் அறிந்துகொள்ளும் ஒரே வழி அதுதான், அது தேவனுடைய சித்தம் மற்றும் வார்த்தையின் ஆவிக்குரிய வெளிப்பாடாகும். நீங்கள் அதை வேறெங்கும் ஒருபோதும் கற்றுக்கொள்ள மாட்டீர்கள், வெளிப்பாட்டினால் மட்டுமே கற்றுக்கொள்வீர்கள். 66 நான் இந்தச் செய்தியை விட்டுவிட்டுச் செல்ல முடியுமானால், ஒரு கணம் இதைக் கவனியுங்கள்: ஆதியாகமத்திற்குத் திரும்பிச் சென்றால், ஆபேலும் காயீனும் இருவரும் பலியைக் கொண்டுவரும்போது, அந்த இரண்டு மனிதர்களும் விசுவாசிகளாக இருந்தார்கள், ஆபேலும் காயீனும் இருவருமே விசுவாசிகளாக இருந்தார்கள், அவர்கள் அவிசுவாசிகள் அல்ல. காயீன் ஒரு அவிசுவாசியல்ல, கம்யூனிஸ்ட்டும் அல்ல, அவன் ஒரு விசுவாசி. நல்லது, இப்போது, கர்த்தர் மேல் விசுவாசம் வைப்பது மட்டும்தான் தேவன் எதிர்பார்த்த காரியம் என்றால், ஆபேலுக்கு இருந்த அதே விசுவாசம், ஆராதிப்பதற்கான விசுவாசம், பலியிடுவதற்கான விசுவாசம், நம்புவதற்கான விசுவாசம் அவனுக்கு இருந்தபோதிலும் காயீனை அவர் ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தது அநீதியாகும். 67 ஆகவே மக்கள், "நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் விசுவாசிப்பது மட்டுமே" என்றார்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அதுமட்டுமே, ஆனால் பின்பு தேவன் ஏதோவொன்றைச் செய்ய வேண்டும். 68 ஒரு மெய்ப்பித்தலைக் கவனியுங்கள், காயீன் ஆராதித்தான், காயீன் அவனுக்கென்று ஒரு சபையை, ஒரு பலிபீடத்தைக் கட்டினான், காயீன் பலிபீடத்தில் ஆராதித்தான், காயீன் ஒரு பலியைச் செலுத்தினான், ஆபேல் எவ்வளவு மார்க்கப்பற்றுள்ளவனாக இருந்தானோ அவனும் அவ்வளவு மார்க்கப்பற்றுள்ளவனாக இருந்தான், ஆனால் காயீன் கிரியைகளை, வயலின் கனிகளைக் கொண்டுவந்து அவற்றை பலிபீடத்தின் மேல் வைத்தான். இப்போது, நிச்சயமாக, கனி தான் நம்மை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே கொண்டு வந்தது என்று காயீன் நினைத்தான், "நான் பிரயாசப்பட்டுத் திரும்பக் கொண்டுவர வேண்டிய ஏதோ ஒன்று." மேலும் இப்போது, அந்த விருட்சம் விலக்கப்பட்ட ஒரு கனி என்பதை அறிந்திருந்தபடியால், ஒரு இயற்கையான கண்ணோட்டத்தில் அவன் அதைச் செய்தான், ஆகையால் அவன் கனியைத் திரும்பக் கொண்டுவந்து அதைப் பலிபீடத்தின் மேல் வைத்தான். 69 ஆனால் ஆபேலுக்கு, அது கனி அல்ல, இரத்தமே அதற்குக் காரணம் என்பது ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மூலமாக, அவனுடைய விசுவாசத்தின் வாயிலாக தேவனால் அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. எனவே ஒரு ஆவிக்குரிய வெளிப்பாட்டினால், எப்போதாவது கட்டப்பட்ட அந்த முதல் சபைக் கட்டிடங்களில், எழுப்பப்பட்ட முதல் பலிபீடங்களில், சாதக பாதகங்கள் இருந்தன. ஆபேல், ஆவிக்குரிய வெளிப்பாட்டினால், எழுதப்பட்ட வார்த்தை இல்லாத காரணத்தால், அது கனிகளோ, அல்லது உங்கள் கைகளின் கிரியைகளோ அல்ல என்பதை தேவன் அவனுக்கு வெளிப்படுத்தினார், அவன் இரத்தத்தைக் கொண்டுவந்து இரத்தத்தைப் பலியாகச் செலுத்தினான், அவன் நீதிமான் என்று அது அவனுக்காகச் சாட்சி கொடுத்தது, ஏனென்றால் அவன்... அது ஆவிக்குரியதாக அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. 70 இயேசு மறுரூப மலையிலிருந்து கீழே வந்தபோது, அவர், "மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்?" என்றார். "சிலர் உம்மை மோசே என்றும், சிலர் உம்மை எலியா என்றும், மற்றும் தீர்க்கதரிசிகள் என்றும் சொல்லுகிறார்கள்" என்றார்கள். அவர், "ஆனால் நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?" என்றார். அதற்குப் பேதுரு, கவனியுங்கள், முன்னால் வந்து, "நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" என்றான். சீக்கிரமாகக் கவனியுங்கள், இயேசு, "சீமோன் பர்யோனாவே, நீ பாக்கியவான், மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை" என்றார். ஆமென். அதைப் பாருங்கள், "நீங்கள் ஒருபோதும் இதை ஒரு வேதாகமப் பள்ளியில் கற்றுக் கொள்ளவில்லை, இதை எந்த மனுஷனிட மிருந்தும் நீங்கள் கற்றுக்கொள்ளவில்லை." 71 பவுல், அவர் மனுஷருடைய ஞானத்தைப் பிரசங்கிக்க வரவில்லை, மாறாக உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்தின் மேல் அல்லாமல், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையின் மூலமாக நிலைநிற்கும்படிக்கு, அவர் கிறிஸ்துவின் வல்லமையைப் பிரசங்கிக்க வந்தார் என்று சொன்னார். 72 "நீ பாக்கியவான், மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதாவே இதை உனக்கு வெளிப்படுத்தினார்." கவனியுங்கள், "இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை." 73 போதகர்களே, என் சகோதரர்களே, கத்தோலிக்கர்களே, "ஒரு கல்லாக இருந்த பேதுருவின் மேல் அவர் அதைக் கட்டினார்" என்று நீங்கள் சொல்வதைக் கேட்கிறேன். அவர் அப்படிச் செய்திருந்தால், அவன் சில நாட்களிலேயே பின்வாங்கிப் போய்விட்டான். 74 கவனியுங்கள், அவர்களில் ஒருவர் அது கிறிஸ்துவின் மேல் என்று சொன்னார். இல்லை. கிறிஸ்துவே வார்த்தையாக இருக்கிறார், கிறிஸ்துவே தேவனுடைய வெளிப்பாடாக இருக்கிறார். ஆனால் அவர், "மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத் தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதாவே இதை உனக்கு வெளிப்படுத்தினார்" என்று சொன்னார். இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனாக இருக்கிறார் என்ற ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மேல்தான் அவர் தமது சபையைக் கட்டுகிறார், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ள முடியாது. 75 கிறிஸ்து அந்த கற்பாறையாக இருக்க வில்லை. இதுவுமல்ல... நல்லது, ஒரு வகையில் கிறிஸ்துவே கற்பாறையாக இருக்கிறார். ஆனால் அவர் பேதுருவிடம் பேசிக்கொண்டிருந்தது, அது ஆவிக்குரிய வகையில் வெளிப்படுத்தப்பட்ட சத்தியம், அதுவே தேவனுடைய குமாரன் என்பதற்கான தேவனுடைய ஒரு சாட்சியாகும். "மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதாவே இதை உனக்கு வெளிப் படுத்தினார்," ஆவிக்குரிய வெளிப்பாடு. தேவன் அனுமதிக்கும்போது மட்டுமே உங்களால் அதைப் பெற்றுக்கொள்ள முடியும். "ஏனென் றால் மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதாவே இதை உனக்கு வெளிப் படுத்தினார்," ஆவிக்குரிய வெளிப்பாடு. 76 ஆகவே நீங்கள் பார்த்தால், யோசேப்பு என்ற அந்தத் தீர்க்கதரிசி மரித்த பிறகு, கீழே இருந்த அந்தப் பிள்ளைகளுக்கு வேறு எங்கும் எந்த வழியும் இல்லை, மேலும் சபை ஒருவேளை முன்பைப் போலவே வைதீக மானதாக இருந்திருக்கலாம். மோசேயின் நாட்களில், நானூறு ஆண்டுகளுக்குப் பிறகும், அவர்கள் தங்களின் மூப்பர்களையும், வேத பாரகர்களையும் மற்றும் பலரையும் கொண்டி ருந்தார்கள், அதேபோல் மார்க்கப்பற்றுள் ளவர்களாக இருந்தார்கள், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை, இத்தனை காலமாக சபை செயலற்றுக் கிடந்தது. அதுபோன்ற ஒரு காலத்தில்தான் நாமும் பல வருடங்களாக வாழ்ந்திருக்கிறோம், சரிதான், செயலற்று, எதுவும் நடக்காமல் இருக்கிறது. 77 ஆனால் திடீரென்று, வாக்குத்தத்தத்தின் காலம் சமீபித்தபோது, தேவன் முன் குறிக்கப்பட்ட, முன்கூட்டியே நியமிக்கப்பட்ட, தெரிந்துகொள்ளப்பட்ட மற்றொரு சிருஷ்டியை கீழே அனுப்பினார், அவர் உலகத்தில் பிறந்தார், அவர் பிறந்தபோது ஏதோ ஒன்று நடந்தது. அவன் ஒரு பிள்ளை, தேவனுடைய ஒரு சரியான பிள்ளை என்பதை அவனுடைய பெற்றோர் அறிந்திருந்தார்கள், அதனால் அவர்கள் பார்வோனின் நிந்தைக்குப் பயப் படவில்லை. அவன் ஒரு குழந்தையாக இருந்த போதே தேவன் மக்களைச் சந்தித்துவிட்டார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். நான் சொல்வது என்னவென்று பார்க்கிறீர்களா? அது... சர்வவல்லமையுள்ள தேவன் அதைத் தொடங்கா விட்டால், நமது அனைத்து அமைப்புகளும், ஒன்றுகூடுவதும், நாம் வைத்திருக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும், அது எழுதப்பட்டிருக்கும் காகிதத்திற்குச் சமமான மதிப்பைக் கூட பெற்றிருக்கவில்லை. அவரே அதைச் செய்கி றவர், அதைச் செய்வதற்கான திறவுகோல்களை வைத்திருக்கும் ஒரே நபர் அவரே. 78 தேவன் இப்போது தேசங்களில் மனுஷனை சாலையின் இறுதிவரை ஓட விடுகிறார். நாம் பெரிய 'பிக் ஃபோர்' (Big Fours) அமைப்புகளையும், மற்றும் பென்டகன் களையும், மற்றும் மற்ற எல்லாவற்றையும் வைத்திருக்கிறோம், ஆனால் அது எதற்கும் உதவாது. உலகத்தை நியாயந்தீர்க்கும் ஒரு காலத்தை தேவன் உலகத்திற்கு நிர்ணயித் திருக்கிறார், அதுவரைக்கும் எல்லாமே சுழன்று கொண்டிருக்கும். அவர் மேலே பரலோகத்தில் சொல்லும் வழியின்படியே எல்லாமே செயல்பட்டாக வேண்டும். ஆமாம், ஐயா. 79 இப்போது, மோசே களத்தில் வந்தபோது, அவனால் மோசேயாக இருப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை, அவன் ஒரு தீர்க்கதரிசியாகவே பிறந்தான். தேவன் அவனைக் கீழே அனுப்பி, அவனுக்கு பூமியில் ஜீவனைக் கொடுத்தார், உலகில் உள்ள எந்தப் பார்வோன்களாலும் அவனைக் கொன்றிருக்க முடியாது, அவன் தேவனுடைய தீர்க்கதரிசியாக இருந்தான். பின்பு மோசே களத்தில் வந்தவுடனே, வியக்கத்தக்க காரியங்கள் நடக்க ஆரம்பித்தன. விடுதலையாக்குவதற்காக அவர் தேவனுடைய தீர்க்கதரிசியாக இருந்தார். பின்பு தேவன் ஒரு மனிதனை அனுப்பிய உடனே, இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்கள் நடக்க ஆரம்பித்தன. 80 மேலும் சபை இவ்வளவு காலமாக மரித்துக் கிடக்கும்போது, உங்கள் சபைக்கு ஒரு எழுப்புதல் இல்லாதபோது, போதகர் வெறுமனே ஒரு உலர்வான, வறண்ட பிரசங்கத்துடன் நிற்கும்போது, யாராவது, "ஆமென்" என்று சொன்னால், உதவிக்காரர்கள் (deacons) அவரை கட்டிடத்திற்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும் என்று எல்லோரும் விரும்பும்போது. நீங்கள் அதுபோன்ற ஒரு சபையைப் பெற்றிருந்தால், அது செயலற்றுக்கிடக்கும். 81 பின்பு, ஓ, தேவன் தம்முடைய மனுஷனை அங்கே ஒருமுறை அனுப்பட்டும், என்ன நடக்கும் என்று கவனியுங்கள், எழுப்புதலின் அக்கினி மீண்டும் பலிபீடத்தின் மேல் திரும்பி வரும், மக்கள் தங்கள் ஆத்துமாக் களுக்கு இரக்கத்திற்காக அழுது கொண்டிருப் பார்கள், வாழ்க்கைகள் சீர்படுத்தப்படும், சபையில் சுகமளிக்கும் செயல்கள் நடைபெறும், அடையாளங்களும் அற்புதங்களும் நிகழத் தொடங்கும். ஏனென்றால், சிருஷ்டிகரான தேவன் எங்கே இருக்கிறாரோ, அங்கே புதிய சிருஷ்டி வருகிறது, புதிய ஜீவன் வருகிறது, புதிய நம்பிக்கை வருகிறது, இயேசு வரும்போது எல்லாம் வருகிறது, எப்பொழுதும் அப்படியே இருந்திருக்கிறது. 82 இப்போது, மீண்டும் கவனிப்போம், விரைவாக, பயணத்தில் இருக்கும்போது, இன்று பயணத்தில் இருக்கும் சபையின் பரிபூரண முன்னடையாளமாக, அவர்கள் செல்லும்போது தேவன் அவர்களுக்கு எவ்வாறு காரியங்களை ஆயத்தப்படுத்தி, அவர்களுக்கு வழியை ஏற்படுத்தினார் என்பதை. பின்பு சபை குளிரத் தொடங்கும் ஒரு நேரம் வருகிறது, அவர்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பொல்லாங்கானதைப் பேசவும், முறுமுறுக்கவும் தொடங்கினார்கள். அவர்கள் குளிரத் தொடங்கியபோது, பாளயத்திற்குள் வியாதி வந்தது, கொள்ளிவாய்ச் சர்ப்பங்கள் உள்ளே வந்து, மக்களைக் கடிக்கத் தொடங்கின, இஸ்ரவேலுக்குள் மிகுந்த வியாதி உண்டானது, மக்களில் அநேகர் மரித்தார்கள். இப்போது, அவர்கள் தாங்கள் தவறு செய்துவிட்டோம் என்று அறிக்கை செய்தவுடனே, மோசே சென்று அவர்களுக்காகப் பரிந்துபேசினார். 83 இந்த இரவு முழுவதும் இந்த ஐக்கிய அமெரிக்காவிற்குத் தேவையானது ஒரு நல்ல, பழங்காலத்து அறிக்கை, ஆம், உங்கள் தவறை ஒப்புக்கொண்டு, தேவனிடம் இரக்கம் கேட்பதே ஆகும். வெறுமனே சபையில் சேருவது மட்டுமல்ல, வெறுமனே தொடர் கூட்டங்களைத் தொடங்குவது மட்டுமல்ல, மாறாக எங்கும் ஒரு பழங்காலத்து அறிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். "ஆண்டவரே, நாங்கள் தவறு செய்துவிட்டோம்." கள்ள மதுபானக் கடைகளை மூடுங்கள், விபச்சார விடுதிகள் அனைத்தையும் மூடுங்கள், கடைகளிலிருந்து சிகரெட்டுகளை அகற்றுங்கள், விஸ்கி இனி விற்கப்பட வேண்டாம், நமக்காக நாம் வருந்துகிறோம் என்பதை தேவனுக்கு நிரூபியுங்கள், இரவு விடுதிகளை மூடுங்கள், உங்கள் முழங்கால்களில் நின்று ஜெபிக்கத் தொடங்குங்கள், அதுதான் ஒரு எழுப்புதலைத் தொடங்குவதற்கான வழியாகும். அது சரி. அது உண்மை. அதைப்பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். 84 நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் பாருங்கள், அவையெல்லாம் வீணானவை. நீங்கள் உண்மையிலேயே அதைப்பற்றி உண்மையாக இருக்கிறீர்கள் என்று தேவனுக்கு நிரூபிக்கும் வரை எல்லாமே வீண். அதுதான் வழி. 85 உங்கள் சுகமளிப்பைப் பொறுத்த வரையிலும் அதே வழியில் தான் இருக்கும். நீங்கள் இந்த ஜெப வரிசையில் ஓடலாம், மற்றொரு ஜெப வரிசையில் ஓடலாம், இதைத் தொடலாம், அதைத் தொடலாம், இதைச் சொல்லலாம்... நீங்கள் கீழே விழுந்து நீங்கள் உண்மையானவர் என்று தேவனுக்கு நிரூபிக்கும் வரை! உங்களுக்குப் பின்னால் உள்ள பாலங்களை எரித்துவிட்டு, "ஆண்டவரே, இதோ நான் இருக்கிறேன்," என்று சொல்லுங்கள், அப்போது ஏதோ ஒன்று நடக்கப் போகிறது. 86 பரிசுத்த ஆவியானவரைக் குறித்தும் அதே காரியம் தான். "நான் பல ஆண்டுகளாகப் பரிசுத்த ஆவியானவருக்காகத் தேடிக் கொண்டி ருக்கிறேன்," என்று நீங்கள் சொல்லலாம். 87 நான் உங்களைக் கடிந்துகொள்ளவில்லை, ஒன்று உங்களுக்குத் தவறாகக் கற்பிக்கப் பட்டுள்ளது, அல்லது ஏதோ தவறு இருக்கிறது, அல்லது உங்களுக்குப் புரியவில்லை. 88 தேவன் தமது வார்த்தைக்குக் கடமைப் பட்டிருக்கிறார். பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு, "நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்," என்று சொன்னார். அதுதான் வேதம், அதை எப்படி வாசிப்பது என்று எனக்குத் தெரிந்தவரை அது அவ்வளவு தெளிவாக இருக்கிறது. நீங்கள் மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றிருந்தால், தேவனை நோக்கி உங்கள் விசுவாசம் சரியாக இருந்தால், நீங்கள் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியும் அந்த நிமிடமே பரிசுத்த ஆவியானவரை உங்களுக்குத் தர தேவன் கடமைப் பட்டிருக்கிறார். அதை விசுவாசியுங்கள், தேவன் அதை உங்களுக்கு மெய்ப்பித்துக் காட்டுவார். 89 உங்கள் இருதயம் தேவனுக்கு முன்பாக உண்மையிலேயே சரியாக இருந்தால், நீங்கள் சரியாகக் கற்பிக்கப்பட்டு, அதை விசுவாசித்து, ஒரு நிச்சயத்துடன் அங்கே நடந்து சென்றால், ஏதோ ஒன்று நடக்கப் போகிறது, ஏனென்றால் நீங்கள் பரிசுத்த ஆவியானவரை ஏற்றுக்கொள்ள விரும்புவதை விட, அவரை உங்களுக்குக் கொடுக்க தேவன் அதிக விருப்பமுடையவராக இருக்கிறார். 90 இப்போது, அதோடு இன்னும் சற்று மேலே செல்வோம். இப்போது, மோசே சென்று தேவனிடம் பேசினபோது, "தேவனே, இதைக் குறித்து நான் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டான். பரிசுத்த ஆவியானவரைக் கவனியுங்கள், விரைவாக, "நீ ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் வைத்து, இஸ்ரவேலின் நடுவில் அதை உயர்த்து, அப்போது, இந்தச் சர்ப்பத்தைப் பார்த்து, விசுவாசிக்கிற எவரும், தங்கள் வியாதிகளிலிருந்து குணமடைவார்கள்," என்று சொன்னார். 91 இப்போது முதல் காரியம், வெண்கலம் மற்றும் கம்பம், சர்ப்பம் உருவாக்கப்பட்டது, மற்றும் எல்லாமே இயேசு கிறிஸ்துவைப் பற்றிப் பேசின. நிக்கொதேமுவிடம் பேசும் போது இயேசு, "மோசே வனாந்தரத்திலே வெண்கலச் சர்ப்பத்தை உயர்த்தினதுபோல, மனுஷகுமாரனும் அதே நோக்கத்திற்காக உயர்த்தப்பட வேண்டும்," என்று சொன்னார். 92 இப்போது, அவர்கள் செய்த முதல் காரியம் என்ன? மக்கள் செய்த முதல் காரியம் என்னவென்றால், அவர்கள் தேவனோடு தர்க்கம் செய்தார்கள், அவர்கள் பாவம் செய்தார்கள், அதனால்தான் சர்ப்பங்கள் அவர்களைக் கடித்தன. அவர்களுடன் இருந்த எகிப்திய மருத்துவர்களின் ஞானத்தால் அந்தப் பாம்பு கடியைக் குணப்படுத்த முடியவில்லை, ஏனென்றால் அது ஒரு தெய்வீகமான காரியமாக இருந்தது. 93 எனவே இப்போது, பாவத்தை ஒழித்துவிட்டால், வியாதியை ஒழித்துவிடலாம் என்பதை அறிந்த தேவன், அந்தச் சர்ப்பத்தை உண்டாக்கினார். சர்ப்பம், முதலாவதாக, ஏதேன் தோட்டத்திலிருந்தே ஏற்கனவே நியாயந்தீர்க்கப் பட்ட பாவத்தைக் குறிக்கிறது, கால்கள் எடுக்கப்பட்ட அந்தச் சர்ப்பத்தை; வெண்கல பலிபீடத்தைப் போல, வெண்கலம் தெய்வீக நியாயத்தீர்ப்பைக் குறிக்கிறது, மற்றும்-மற்றும் ஆகாப் நாட்டை இவ்வளவு காலமாக ஆண்ட எலியாவின் நாட்களில் இருந்த வெண்கல வானத்தையும்; மற்றும் கம்பம் சிலுவையைக் குறிக்கிறது. எல்லாமே கிறிஸ்துவைக் குறிக்கின்றன. அவர் ஏன் அதை முன்னதாகவே காண்பித்தார்? தேவன், ஆரம்பத்தில், தாம் செய்யப்போகும் காரியத்தின் மீது இஸ்ரவேல் மக்களை வட்டி எடுக்க மட்டுமே அனுமதித்தார். 94 பாருங்கள், தேவனின் மனதில், கிறிஸ்து ஏற்கனவே சிலுவையில் அறையப்பட்டிருந்தார், ஏனென்றால் அவர் உலகத் தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர். ஏதேனில், தேவனின் சிந்தனைகளில் இருந்த கிறிஸ்து, அவருடைய வார்த்தையாக மாறினார், அது இன்னும் நிஜமாகவில்லை, ஆனால் அது அப்படி ஆகுமென்று அவர் அறிந்திருந்தார், ஏனென்றால் அவர் அதை வாக்குத்தத்தம் செய்திருந்தார். முதலீடு செய்யப்படுவதற்கு முன்பாகவே இஸ்ரவேல் மக்களை வட்டி எடுக்க அவர் அனுமதித்தார், அது அப்படித்தான் என்பதைக் காண்பிப்பதற்காக, என்ன நடக்கப்போகிறது என்பதை அறிந்த அவர், பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றை இங்கே உருவாக்கினார், அதனால் சர்ப்பத்தின் மூலமாக என்ன நடக்கப்போகிறது என்பதை அவர்கள் காண முடிந்தது, அதன் மூலமாக அவர்கள் சுகத்தைப் பெற்றார்கள். 95 அவர்கள் பாவத்தை ஒழிக்க முடியும் போது, நீங்கள் சுகத்தைப் பெற வேண்டும். ஓ, ஆச்சரியம்! அது மெத்தடிஸ்டுகளுக்கு நல்ல உணர்வைத் தருகிறது, இல்லையா? ஆம், ஐயா. பாருங்கள், காரணத்தை ஒழித்துவிடுங்கள், உங்களுக்கு நிவாரணம் கிடைத்துவிட்டது, ஏற்கனவே, வட்டி எடுக்கிறீர்கள். 96 மேலும் தேவன் தமது அளவற்ற மனதில், நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு இயேசு சிலுவையில் மரிப்பார் என்பதையும், நமக்காகப் பாவமாக்கப்பட்டு, சிலுவையில் அறையப்படுவார் என்பதையும் முன்னதாகவே அறிந்து, கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாகவே அந்த அற்புதமான காரியத்தால் இஸ்ரவேலைக் குணமடைய அனுமதித்தார் என்றால், கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பிறகு அவர் எவ்வளவு அதிகமாகச் செய்வார்? அது முன்னடையாளமாக இருந்தால், நிஜத்தினால் எவ்வளவு அதிகமாக இருக்கும்? மோசேயைக் கொண்டிருந்ததை விட இன்று நாம் எவ்வளவு பெரிய திட்டத்தைக் கொண்டிருக்கிறோம்? 97 அப்படியிருந்தும் மோசே வனாந்தரத் திலிருந்து வெளியே வந்தபோது, அவர்களுக்குள் பலவீனமான ஒருவனும் இல்லை, நாற்பது ஆண்டுகள், டாக்டர் மோசே. இன்றிரவு இங்கே ஒரு மருத்துவர் இருந்தால், அவருடைய மருந்துச்சீட்டு சிலவற்றை நீங்கள் பெற விரும்புவீர்கள் என்று நான் கற்பனை செய்கிறேன். இருபது லட்சம் மக்களை வழிநடத்தினார், இருபது லட்சம் மக்களில் ஒவ்வொரு இரவும் எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன? எத்தனை முதியவர்கள்? எத்தனை ஊனமுற்றவர்கள், அவர்களுக்குள் எவ்வளவு வியாதிகள்? ஆனால் டாக்டர் மோசே அவர்கள் ஒவ்வொருவரையும் கவனித்துக்கொண்டார், அவர்களுக்குள் பலவீனமான ஒருவனும் இல்லாமல் அவர்களைக் கடந்துவரச் செய்தார். ஏன், டாக்டரே, உங்களால் ஒரு குடும்பத்தைக்கூட அவ்வளவு நன்றாகச் செய்ய முடியாது. அதைப்பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். 98 ஏன்? டாக்டர் மோசேயிடம் மருந்துச்சீட்டு இருந்தது. அவர் மருந்துச்சீட்டாக என்ன வைத்திருந்தார் என்பதை நீங்கள் அனைவரும் பார்க்க விரும்புகிறீர்களா? நான் உங்களுக்குக் காண்பிக்கிறேன், அவருடைய கைப்பெட்டிக்குள் பார்ப்போம்: "நானே உன்னைக் குணமாக்குகிற கர்த்தர்." அவருக்குத் தேவையான மருந்துச்சீட்டு அவ்வளவுதான். "நானே உன்னைக் குணமாக்குகிற கர்த்தர்." அதை உங்கள் கைப்பெட்டியில் வையுங்கள், டாக்டரே, நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் நோயாளிகள் குணமடைவார்கள். "நானே உன்னைக் குணமாக்குகிற கர்த்தர்." குழந்தையோடு தாய் மிகவும் வியாதியா யிருந்தால், "நானே உன்னைக் குணமாக்குகிற கர்த்தர்." சர்ப்பங்கள் கடித்தால், "நானே உன்னைக் குணமாக்குகிற கர்த்தர்." யாருக்காவது கால் உடைந்தால், "நானே உன்னைக் குணமாக்குகிற கர்த்தர்." 99 அந்த உடன்படிக்கையின் கீழ் அவர் அதைச் செய்தார் என்றால், இன்றைய உடன்படிக்கை எவ்வளவு பெரியது? முன்னடையாளத்தின் கீழ் அவர் அதைச் செய்தார் என்றால், நிஜத்தின் கீழ் அவர் என்ன செய்வார்? 100 கிறிஸ்தவ நண்பர்களே, நான் எதை நம்பத் தொடங்குகிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த உலகம் இதுவரை கண்டிராத மிகச் சிறந்த காலத்தின் தொடக்கத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைத்தான். எல்லா தடைகளும் நீங்கிவருகின்றன என்று நான் நம்புகிறேன். உங்களுக்குத் தெரியும், எல்லா விதமான உபதேசங்களாலும், இறையி யல்களாலும், மற்றும்-மற்றும் எல்லாவிதமான காரியங் களாலும், அவிசுவாசத்தாலும் தடை பட்டிருந்தது, அது தலைமுறை தலை முறையாகக் கடத்தப்பட்டு வந்தது, "ஓ, சுகமளித்தல் என்று எதுவும் இல்லை. அற்புதங்களின் நாட்கள் முடிந்துவிட்டன." நாம் அதைத் தானாகவே நம்புகிறோம். ஆனால் மனிதன் அல்ல, தேவன் என்ற இடத்திற்கு அது வந்துவிட்டது, நாம் இன்னும் அந்த பழைய சம்பிரதாய வழியிலேயே இருந்திருப்போம்... 101 கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் அறிவியல் எவ்வாறு முன்னேறியுள்ளது என்பதைப் பாருங்கள். அதைப்பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு செய்தியை அனுப்ப அவர்களுக்கு இருந்த ஒரே வழி ஒரு கடிதம் மூலமாகவோ அல்லது வாய்மொழியாகவோ மட்டுமே இருந்தது, ஆனால் இன்று அவர்கள் அதைத் தொலைபேசி, தந்தி, கம்பியில்லாத் தந்தி, தொலைக்காட்சி மூலமாக அனுப்ப முடிகிறது. அவர்கள் அதை அனுப்பக்கூடிய வழியை, அவர்கள் எப்படி முன்னேறினார்கள் என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். 102 நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு சிந்தித்துப் பாருங்கள், ஒரு பிரெஞ்சு விஞ்ஞானி, இப்போது அவர் பெயரைக் கூற முடியாது, கொஞ்ச காலத்திற்கு முன்புதான் இதைப் பற்றி வாசித்தேன், உலகம் தங்களுக்குத் தெரிந்த விதத்தில் சுழன்று கொண்டிருக்கிறது என்றால், அது இருபத்தையாயிரம் மைல்கள் சுற்றளவு கொண்டிருப்பதால், அது... மணிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மைல்கள் வேகத்தில் செல்ல வேண்டும் என்றும், ஒரு நபர் மணிக்கு முப்பது மைல்கள் என்ற பயங்கர வேகத்தில் சென்றால், புவியீர்ப்பு விசை அவரைப் பூமியிலிருந்து அப்புறப்படுத்திவிடும் என்றும் நிரூபித்தார், அல்லது, தன்னால் நிரூபிக்க முடியும் என்றார். அறிவியல் பூர்வமான நிரூபணம்! ஆச்சரியம்! அவர் எதைப் பறக்கவிட்டிருப்பார் என்று ஆச்சரியப் படுகிறேன், ஒரு பலூனையா? 103 கவனியுங்கள், இன்று அவர்கள் அதில் கவனம் செலுத்துகிறார்களா? நீங்கள் உங்கள் காருக்குள் குதித்து மணிக்கு நூறு மைல் வேகத்தில் ஓட்டுகிறீர்கள், அதைப் பற்றி எதுவும் சிந்திப்பதில்லை. நிச்சயமாக. நான் அந்த நாளில் ஏதோ ஒரு வகையான சிறிய போர்டு காரைப் பார்த்தேன், அது மணிக்கு நூற்றைம்பது மைல் வேகத்தில் செல்லும் என்று அவர்கள் சொன்னார்கள். அறிவியல் சொன்னதைப்பற்றி அவர்கள் எந்தக் கவனமும் செலுத்துவதில்லை, ஏனென் றால் அவர்கள் முன்னேறிவிட்டார்கள், அவர்கள் ஒரு அணுவைப் பிளக்கிறார்கள். அவர்கள் அணுக்கள் மூலமாக காற்றின் மூலக் கூறுகளோடு விளையாடும்போது அறிவியல் எதைக் கண்டுபிடிக்கத் தொடங்கியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அணுக்கள் பின் னோக்கிச் சுழன்று தேவனிடம் வரும் வரை உடைகின்றன, ஒளி தேவனிடமே திரும்பிச் சுழல்கிறது. அறிவியல் இப்போது காரியங்களை நிரூபித்துக்கொண்டிருக்கிறது, ஏனென்றால் அவர்கள் அதை மீண்டும் தேவனிடமே அடிப் படையாகக் கொள்கிறார்கள், அது மீண்டும் பின்னோக்கி ஓடுகிறது என்பதை அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். 104 நான் இங்கே இருந்தபோது கொஞ்ச காலத்திற்கு முன்பு இந்தப் பிரசங்க பீடத்திலிருந்து ஒரு வல்லமையான விஞ்ஞானி பேசினார். அந்த அறையில் அவர் என்னிடம் அந்த ஒளியைப் பற்றி, தோன்றிய அந்தத் தூத ஒளியைப் பற்றிக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார், அதை ஒரு காகிதத்தில், ஒரு புகைப்படத்தில் வைத்திருந்தார், ஏன், அவர் சொன்னார், "ரெவரென்ட் பிரன்ஹாம், அவர்கள் எப்படி ஒரு மரணமடையும் பரிசுத்தவானின் மீது ஒரு மீட்டரை வைத்தார்கள், அவள் மரித்துக்கொண்டிருந்தபோது அது அறைக்குள் நழுவியது, அதைப் பற்றி அவளுக்கு எதுவும் தெரியாது, அவளுடைய மரணம் அவளைத் தாக்கியபோது, அவள் பயப்படவில்லை. அவள் தன் கண்களை உயர்த்தி, தனக்கு இருந்த ஒவ்வொரு எதிரியையும் மன்னிக்கும்படி தேவனிடம் கேட்டாள், மேலும் தான் வாழ்ந்த வாழ்க்கைக்காக அவருக்கு நன்றி கூறினாள். அந்த மீட்டர் பூஜ்ஜியத்தில் வைக்கப் பட்ட போது, அந்தப் பெண்ணிடமிருந்து போதுமான வல்லமை எழுந்தது, அவளிடமிருந்து சென்ற ஏதோ ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்டது, உங்கள் நரம்புகளை... பொய் கண்டறியும் கருவியாகச் செய்யப்பட்ட அதே பொருளினால் உருவாக்கப்பட்ட அந்த மீட்டரில் அது பதிவாகியது..." 105 நீங்கள் பொய் சொல்வதற்காகப் படைக்கப்படவில்லை. நீங்கள் உங்கள் மணிக்கட்டைச் சுற்றி ஒரு பொருளை வைத்து, உங்களை அங்கே உட்காரவைத்து, உங்களை ஏதோவொன்றைச் சொல்ல முயற்சி செய்ய விடலாம், நீங்கள் அதைப் பற்றிய உண்மையைச் சொல்லவில்லை என்றால், நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று அது காட்டும், ஏனென்றால் உங்கள் நரம்புகள் வழியாகச் செல்லும் ஒளியின் மீது ஒரு அழுத்தம் இருக்கிறது, ஆற்றல், அதுவே மனுஷனின் ஆத்துமா, அது ஆதியிலே பொய் சொல்லும்படி உருவாக்கப்படவில்லை, மாறாக உண்மையாக இருக்கும்படி உருவாக்கப்பட்டது. 106 அறிவியல் அதை ஒரு காப்புரிமையாக, அல்லது, ஒரு இடமாக உருவாக்கியுள்ளது, சத்தியத்தின் மீதான அதே காரியம், ஏன், தேவனுடைய இந்தப் பரிசுத்தவான், மரித்துக்கொண்டிருந்தவள், அவள் தேவன் மீதான அவளது விசுவாசத்தின் காரணமாக அவளது சொந்த வீட்டை விட்டுத் துரத்தப்பட்டாள், அவள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவர்மேல் விசுவாசம் வைத்ததால் அவள் ஒரு பைத்தியம் என்று அவர்கள் சொன்னார்கள், உலகத்தை ஐந்து முறை சுற்றி ஒரு வானொலி செய்தியை அனுப்பும் அளவிற்குப் போதுமான வல்லமை அந்தப் பெண்ணிடமிருந்து வந்தது, அந்த மரணமடையும் பெண்ணிடமிருந்து வரும் வல்லமை அது என்று நான் நம்புகிறேன். அவளது மரண வேளைகளில் உண்மையான இருதயத்தின் மூலமாக ஏறெடுக்கப்பட்ட ஒரு ஜெபத்தின் மூலம் சந்திரனையும், நட்சத்திரங் களையும் தாண்டி தேவனுடைய சிங்காச னத்திற்குச் செல்லுங்கள். 107 பின்பு அவர் பாலியல் வியாதியுடன் மரித்துக்கொண்டிருந்த ஒரு நாத்திகரான மனிதனிடம் நழுவிச் சென்றார், ஒரு இளம் பெண்ணை உள்ளே அனுப்பி அவனை உணர்ச்சிவசப்பட வைத்தார். பின்பு அவன் அவள் மேல் கோபமடைந்தபோது, சபிக்கவும், தேவனுடைய நாமத்தை வீணாக வழங்கவும் தொடங்கினான், கிறிஸ்தவர் இந்த வழியில் செய்ததைப் போலவே மீட்டரானது எதிர் திசையில் அந்த அளவிற்குத் திரும்பியது. 108 அந்த விஞ்ஞானி மனமாற்றமடைந்து, "தேவன் தமது நாமத்தை மகிமையான வழியில் பயன்படுத்தி, தம்மை அவ்வளவாக விசுவா சிக்கிற மக்களை மதிக்கிறார் என்றால், நான் இப்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன், அவரை இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன்," என்று சொன்னார். 109 எனவே அவர் சொன்னார், "ரெவரென்ட் பிரன்ஹாம், இரட்சகரைச் சுற்றியும், பரிசுத்தவான்களைச் சுற்றியும் இருந்த அந்த ஒளிகள், வெறும் மனக் கற்பனை அல்ல, அது வெண்கலச் சர்ப்பத்தைப் போன்ற நாட்களில் இருந்த தேவன்." 110 இப்போது அது உண்மை என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அல்லேலூயா! ஆனால் அது ஒவ்வொரு விசுவாசியைச் சுற்றியும் வல்லமை இருப்பதைக் புகைப்படம் எடுக்க அவர்களிடம் ஒரு கேமரா வருவதற்கு முன்பாகும். அந்த...[ஒலி நாடாவில் காலியிடம்] 111 உமது வார்த்தை சத்தியமானது. ஆண்டவரே, உமது நேச குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உயர்த்தும் இந்தச் சில வார்த்தைகளில் நீர் இப்போது எங்களுடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம், "நான் உயர்த்தப்பட்டால், எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்வேன்," என்று அவர் சொன்னார். ஓ தேவனே, மக்களுக்கு முன்பாக அவரை உயர்த்த எங்களுக்கு உதவிசெய்யும், அவரை உன்னதமாக உயர்த்த எங்களுக்கு உதவிசெய்யும், மேலும் "பிதாவினால் அவர் உயர்த்தப் பட்டபடியே-உயர்த்தப் பட்டபடியே இதோ அவர் இருக்கிறார்," என்று சொல்லும். ஒவ்வொரு பிரதான தூதனுக்கும், பரலோகத்தில் நாமம் தரிக்கப்பட்ட ஒவ்வொரு நாமத்திற்கும் மேலாகச் சென்றார், அவருடைய நாமம் எல்லாவற்றிற்கும் மேலானது. அவர் மரித்தோரிலிருந்து எழுந்த போது, "வானத்திலும் பூமியிலுமுள்ள சகல அதிகாரமும் என் கையில் கொடுக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் உலகமெங்கும் போய், சுவிசே ஷத்தைப் பிரசங்கியுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தமும் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்," என்று சொன்னார். 112 பரம பிதாவே, நான் கொண்டுள்ள இந்த ஏழ்மையான, தாழ்மையான வழியில், ஆனாலும் ஆசீர்வதிக்கப்பட்ட, அதற்காக நான் நன்றியு டனும் ஸ்தோத்திரத்துடனும் இருக்கிறேன்... அந்த இரவில் என்னைச் சந்தித்த தேவனுடைய மாபெரும் தூதன், இப்போது மேடையில் இங்கே நின்றுகொண்டு, "அந்த ஜெப வரிசையை அழையுங்கள்," என்று என்னை எச்சரிப்பது போலத் தோன்றுகிறது. ஒருவேளை இன்றிரவு அநேகரை விசுவாசிக்கச் செய்யும் வகையில் ஏதோ ஒன்று நடக்கலாம், பிதாவே. 113 பின்பு ஆராதனை முடிந்ததும், தேவனே, ஒவ்வொரு அவிசுவாசியும் இங்குள்ள பலிபீடத்திற்கு விரைந்து வந்து, "இப்போது நான் விசுவாசிக்கிறேன்," என்று சொல்ல வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்; பரிசுத்த ஆவியானவர் இல்லாதவர்கள், அவர்கள் இருக்கையில் அமர்ந்திருக்கும்போதே இன்றிரவு அதைப் பெற்றுக்கொள்ளட்டும்; தேவனைத் தேடுகிறவர்களுக்கு, உமது பிரசன்னத்தினிமித்தம் இது ஒரு மகிமையான இரவாக இருக்கட்டும். உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். 114 விநோதமான காரியங்கள் கிறிஸ்தவர்கள் மத்தியில் கிரியை செய்கின்றன. (நீங்கள் ஜெப அட்டைகளைக் கொடுக்கிறீர்களா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. நேற்றிரவு அவை என்னவாக இருந்தன, J -களா? J -கள். அவற்றின் முதல் பகுதியை நாம் அழைத்தோம் இல்லையா? நாம் அழைப்போம்... நேற்றிரவு நம்மிடம் எத்தனை இருந்தன, இருபதா? எல்லாவற்றையும் பெறவில்லையா? சரி, நாம் கடைசியாக எடுப்போம்... அங்கிருந்து நேற்றிரவு சுமார் பதினைந்து எனக்குக் கிடைத்ததா? சரி, இன்றிரவு தொடங்குவதற்கு இங்கே பதினைந்து பேரை அழைப்போம்.) நாம் J ஐ எடுப்போம், எண்பத்தைந்து, எண்பத்தைந்து முதல் நூறு வரை, அப்படியானால். அது... 115 J, எண்பத்தைந்து யாரிடம் உள்ளது? உங்கள் கையை உயர்த்துங்கள். உங்களிடம் உள்ளதா, அம்மா? ஒரு நிமிடம் இங்கே வாருங்கள், நேராக இங்கே கீழே. J, எண்பத்தாறு யாரிடம் உள்ளது? ஜெப அட்டை எண்பத்தாறு, உங்கள் கையை உயர்த்துவீர்களா? எண்பத்தாறு. எண்பத்தாறு, சரி, அம்மா. எண்பத்தேழு. எண்பத்தேழு யாரிடம் உள்ளது? சரி. எண்பத்தெட்டு. சரி. எண்பத்தொன்பது. ஜெப அட்டை எண்பத்தொன்பது யாரிடம் உள்ளது? நீங்கள் இங்கே இருக்கிறீர்களா? உங்கள் கையை உயர்த்துங்கள். எண்பத் தொன்பது, அவர்களிடம் அது உள்ளதா? தொண்ணூறு. ஜெப அட்டை தொண்ணூறு யாரிடம் உள்ளது? தொண்ணூற்று ஒன்று, தொண்ணூற்று இரண்டு, தொண்ணூற்று மூன்று, தொண்ணூற்று நான்கு, தொண்ணூற்று ஐந்து. தொண்ணூற்று ஐந்து, நான் அதைப் பார்த்தேனா? சரி. தொண்ணூற்று ஆறு, தொண்ணூற்று ஏழு, தொண்ணூற்று எட்டு, தொண்ணூற்று ஒன்பது, மற்றும் நூறு. சில நிமிடங்களுக்கு அவற்றை முயற்சி செய்வோம். 116 எனக்கு ஏன் என்று தெரியவில்லை, ஒருவேளை அந்த ஜெப வரிசையில் உள்ள யாராவது விடியற்காலைக்கு முன்பாக மரிக்கலாம், எனக்குத் தெரியாது, நான் சொல்லவில்லை, ஏதோவொன்று, "ஒரு ஜெப வரிசையை வையுங்கள்," என்று சொன்னது. இதோ அதைச் செய்யப் போகிறோம். 117 வியாதியாயிருந்து, தேவன் இன்றிரவு உங்களைக் குணமாக்க வேண்டும் என்று விசுவாசிக்கிறவர்கள் இங்கே எத்தனை பேர் இருக்கிறீர்கள்? நாம்... இருக்கும்போது உங்கள் கையை மட்டும் உயர்த்துவீர்களா? அது... நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை நான் பார்க்க விரும்பினேன். அவர் இங்கே இருக்கிறார், எனக்கு ஏன் என்று தெரியவில்லை, ஆனால் இசை வாசிப்பதற்கு முன்பாகவோ, அல்லது வேறு எதற்கு முன்பாகவோ அது ஏற்கனவே இங்கே இருக்கிறது. தேவனுக்கே துதி உண்டாவதாக! இது இப்படி நடப்பது அரிது. 118 இன்றிரவு நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தேவனுடைய மகிமைக்காக நீங்கள் விசுவாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் ஒரு ஜெப வரிசையை அழைக்காமல் இருந்திருக்கலாமே என்று விரும்புகிறேன், எனக்கு ஒரு ஜெப வரிசை வருவதற்கு முன்பாகவே, அது இப்போது பார்வையாளர்கள் மீது அசைவாடுவதை நான் காண்கிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்! 119 ஓ, இந்தச் சபை இந்தத் தருணத்தில் இப்போது இந்த மாபெரும் மண்டலத்திற்குள் உடைத்துக்கொண்டு செல்வதை நான் காண விரும்புகிறேன், இங்குள்ள ஒவ்வொரு இருதயமும் அதற்குள் விழ வேண்டும். நான் உங்களுக்குச் சொல்கிறேன், காலையில் செய்தித்தாள்கள் முழுவதிலும் இதுதான் இருக்கும். என்ன நடக்கும் என்று சொல்வது கடினம். எல்லாரும் இப்போது இந்த மண்டலத்திற்குள் உடைத்துக்கொண்டு செல்ல முடிந்தால், நாளை மக்கள் நியூ ஆர்லியன்ஸின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மற்றும் மற்ற எல்லா இடங்களிலிருந்தும் வருவார்கள். உலகெங்கிலும் உள்ள பசியுள்ள கிறிஸ்தவர்கள், எல்லா இடங்களிலிருந்தும், அடுத்த சில நாட்களில் இங்குப் பறந்து வருவார்கள். ஓ, இதை வெளிப்படுத்த என்னிடம் சில வார்த்தைகள் இருந்திருக்கக் கூடாதா என்று நான் விரும்புகிறேன்! 120 இப்போது, அது நான் அல்ல, இப்போது, நான் ஒரு மனுஷன், பாருங்கள், நான் வெறும் ஒரு மனுஷன், ஆனால் அவர் தேவன். எவ்வளவு ஆச்சரியம்! எவ்வளவு அற்புதம்! எவ்வளவு மகிமை! நாம் அவரை எவ்வளவு நேசிக்கிறோம்! அவர் எவ்வளவு அருமையானவர்! 121 அவர் எனக்கு மிகவும் அருமையானவர் (For He Is So Precious to Me) என்ற பழைய பாடலை நான் பாடுவது வழக்கம். அம்மா, நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள், இல்லையா? விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய மூட்டுவலி நீங்கிவிட்டது என்று நான் உங்களிடம் சொன்னால், உங்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசிப் பீர்களா? அதை விசுவாசிப்பீர்களா? என்ன? அவர் உங்களைச் சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? அவர் சுகமாக்கிவிட்டார், நீங்கள் ஏற்கனவே சுகமாகிவிட்டீர்கள். தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக! அவர் எவ்வளவு மகிமையானவர்! 122 அம்மா, நீங்கள் வெளியூரிலிருந்து வந்திருக்கிறீர்கள், இல்லையா? நீங்கள் மிச்சிகன், கிராண்ட் ரேபிட்ஸ்ஸிலிருந்து (Grand Rapids, Michigan) வந்திருக்கிறீர்கள். நீங்கள் அங்கே அமர்ந்து ஏதோ ஒன்றைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தீர்கள். அது என்னவென்றால், உங்கள் ஞாபக சக்தியை நீங்கள் இழந்து கொண்டிருந்தீர்கள், உங்களால் சரியாக சிந்திக்க முடியவில்லை. அது சரிதானே? உங்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அந்த அம்மாவும் மிச்சிகனிலிருந்து தான் வந்திருக்கிறார். அது சரிதான். நீங்கள் எதைத் தேடி இங்கே வந்திருக்கிறீர்கள் என்றால், தேவனோடு ஒரு நெருக்கமான நடையைத் தேடி வந்திருக்கிறீர்கள், அதை நீங்கள் பெறப் போகிறீர்கள், கவலைப்படாதீர்கள். உங்கள் ஞாபக சக்தி திரும்பிவிட்டது, இனிமேல் அதைக் குறித்து உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது. 123 தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து இன்றிரவு இங்கே இருக்கிறார். தேவன்மேல் விசுவாசமாயிருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசியுங்கள், தேவனுடைய மகிமையைக் காண்பீர்கள். 124 அங்கே அமர்ந்திருக்கும் அம்மா, உங்கள் வேதனை நிற்க வேண்டுமா? சிறுநீர்ப்பை பிரச்சனை, மற்றும் பல காரியங்கள் உள்ளன. அங்கே பின்பக்கம் அமர்ந்திருப்பவரே, அது சரிதானே? நீங்கள் சுகமாக்கப்பட்டுவிட்டீர்கள், இயேசு கிறிஸ்து உங்களைச் சுகமாக்குகிறார். இப்போது, உங்கள் விசுவாசம் உங்களைச் சுகமாக்கிவிட்டது. இப்போது உங்கள் வலி முழுவதும் நீங்கிவிட்டது, அது உண்மை என்று உங்களுக்குத் தெரியும். ஆமென். 125 நமக்கு இந்த ஜெப வரிசை இருக்க வேண்டியதில்லை, அது தேவையில்லை. உங்களுக்குத் தேவையானது எல்லாம் தேவனை விசுவாசிப்பதற்கான ஒரு சிறிய விசுவாசம் மட்டுமே. நீங்கள் தேவனை விசுவாசியுங்கள், தேவன் உங்களுக்கான மீதி வேலையைச் செய்வார். அவர் எவ்வளவு அற்புதமானவர்! 126 அங்கே பின்பக்கம் அமர்ந்திருக்கும் ஒரு முதியவர், தனக்கிருக்கும் அந்த புரோஸ்டேட் (prostate) பிரச்சனையைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது, இல்லையா, ஐயா? அது இன்னும் உங்களைத் தொந்தரவு செய்கிறது, கவலைப்படாதீர்கள், அது உங்களை விட்டு நீங்கி விட்டது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. விசுவாசத்தோடு இருங்கள், விசுவாசியுங்கள். 127 அந்த முதுகு வலியுடன் அங்கே இருக்கும் இளம் பெண், அதைக் குறித்து என்ன நடக்கப்போகிறது என்று அவளும் ஆச்சரியப் படுகிறாள். இயேசு கிறிஸ்து உங்களைச் சுகமாக்குகிறார். ஆமென். 128 சைனஸ் (sinus) பிரச்சனையுடன் அங்கே பின்பக்கம் அமர்ந்திருக்கும் அம்மா, நீங்களும் அதிலிருந்து குணமடைய விரும்புகிறீர்கள், இல்லையா அம்மா? நல்லது, நீங்கள் இப்போது சுகமாக்கப்பட்டுவிட்டீர்கள், நீங்கள் வீட்டிற்குப் போகலாம். அல்லேலூயா! அவர் இங்கே இருக்கிறார், விடிவெள்ளி நட்சத்திரம். 129 வாருங்கள், அம்மா. இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக்கிறீர்களா? நாம் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள், எனக்கு உங்களைத் தெரியாது, ஆனால் தேவனுக்கு உங்களைத் தெரியும். அவரிடமிருந்து உங்களுக்கு உடனே உதவி கிடைக்க வேண்டும். நீங்கள் மருத்துவரிடம் சென்றீர்கள், மருத்துவர் உங்களைப் பரிசோதித்தார், அந்தப் பரிசோதனை மார்பகத்திலிருந்து, வலது மார்பகத்திலிருந்து வந்தது, அது ஒரு புற்றுநோய், உங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, என்று மருத்துவர் சொன்னார். உங்களைச் சுகமாக்குவதற்காக இயேசு கிறிஸ்து மரித்தார். அதை விசுவாசிக்கிறீர்களா? 130 இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, என் சகோதரி விடுதலையாகும் படிக்கு, இந்தப் பிசாசை நான் கண்டிக்கிறேன்! ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அம்மா. 131 வாருங்கள், அம்மா. எனக்குத் தெரிந்தவரை, நாம் ஒருவருக்கொருவர் முற்றிலும் அறிமுகமில்லாதவர்கள். அது சரிதானே? நாம் ஒருவரை ஒருவர் அறியோம், என் வாழ்க்கையில் நான் உங்களை ஒருபோதும் பார்த்ததில்லை. சில நாட்களுக்கு முன்பு உங்களுக்கு நிறைய துக்கம் இருந்தது, இல்லையா? நேசித்த ஒருவர் அல்லது நண்பர் இறந்துவிட்டார், அல்லது வேறொன்று, ஒரு போதகர். உங்களுக்கு ஒரு கட்டியின் வளர்ச்சி இருக்கிறது. அது சரிதானே? நீங்கள் சுகமடைவீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா? 132 சர்வவல்லமையுள்ள தேவனே, கர்த்தாவே, நீர் அவர்களைச் சுகமாக்கும்படியாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, இந்த அம்மாவை நான் ஆசீர்வதிக்கிறேன். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அம்மா. 133 ஒருவரை நான் இங்கே காணவில்லை, அது பில்லி பால், அவர் எங்கே சென்றார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான்-நான்-நான் அவருடைய ஆவியை அறிவேன், அவருக்கு என்ன பிரச்சனை என்று எனக்குத் தெரியும், நான்-நான் அவருடைய ஆவியைத் தவறவிடுகிறேன். 134 இவர்தானா அந்த நோயாளி? அம்மா, நான் உங்களுக்கு அறிமுகமில்லாதவன், உங்களுக்கு என்னைத் தெரியாது, எனக்கு உங்களைத் தெரியாது, ஆனால் இயேசு கிறிஸ்துவுக்கு நம் இருவரையும் தெரியும். அது சரிதானே? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் வேறொருவருக்காக இங்கே நின்று கொண்டி ருக்கிறீர்கள், அது ஒரு-ஒரு சகோதரி, அல்லது ஒரு ஒன்றுவிட்ட சகோதரி, அவள் ஒரு உடன் பிறந்த சகோதரி அல்ல, அது ஒரு ஒன்றுவிட்ட சகோதரி. அவள் சமீபத்தில்தான் வியாதியால் தாக்கப்பட்டாள். அது, அவர் சொன்னார் என்று நான் நம்புகிறேன், எனக்குப் புரியவில்லை, அது ருமாட்டிக் காய்ச்சல் என்று அவர் சொன்னதாக நான் நம்புகிறேன். அது சரிதானே? மருத்துவர். உங்களுக்கும் ஒரு மகள் இருக்கிறாள், அவள் நோயுற்றிருக்கிறாள், அவளுக்கும் காய்ச்சல் இருக்கிறது. உங்களுக்கு ஒரு நோயுற்ற மகன் இருக்கிறான். உங்கள் பற்களுக்காக நான் ஜெபிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள், இல்லையா? இங்கே வாருங்கள். 135 வானங்களையும் பூமியையும் உண்டாக்கின அன்பான தேவனே, நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஆசீர்வதிக்கிற இந்த அம்மாவின் மீது உம்முடைய ஆசீர்வாதங்களை அனுப்புவீராக. ஆமென். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? 136 வேறொருவரைப் பற்றி என்னைப் பார்க்க நீங்கள் விரும்புகிறீர்கள், இல்லையா? ஒரு சகோதரனுக்காக, மனநிலை பாதிப்பு போன்ற ஒரு காரியத்திற்காக நான் ஜெபிக்க வேண்டும் என்று நீங்கள் கேட்க விரும்புகிறீர்கள். அது சரிதானே? நான் ஜெபிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிற ஒரு வயதான அம்மா உங்களுக்கு இருக்கிறார், அவர் உங்கள் தாய், அவருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. அது சரிதானே? தேவனோடு ஒரு நெருக்கமான நடை உங்களுக்குத் தேவைப்படுகிறது, நீங்கள் எப்போதும் அதைத்தான் விரும்புகிறீர்கள். அவருடைய சித்தத்தை நீங்கள் மிகச்சரியாக, பூரணமாகச் செய்கிறீர்கள் என்று உண்மை யிலேயே உணரும் இடத்திற்கு நீங்கள் ஒருபோதும் வரவில்லை. இப்போது உங்கள் முழு வாழ்க்கையையும் அவருக்கு ஒப்புக்கொடுத்துவிட்டு, வீட்டிற்குச் சென்று நீங்கள் கேட்பதைப் பெற்றுக்கொள்ள நீங்கள் சம்மதிப்பீர்களா? நீங்கள் அப்படிச் செய்து, உங்களை முழுமையாக அர்ப் பணித்தால், தேவன் உங்கள் ஜெபத்திற்குப் பதிலளிப்பார் என்று நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? நானும் விசுவாசிக்கிறேன். 137 சர்வவல்லமையுள்ள தேவனே, உம்முடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, உமது நாமத்தில் நான் ஆசீர்வதிக்கிற இந்த அம்மாவை ஆசீர்வதிப்பீராக. ஆமென். 138 நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? 139 நான் அவரை என் முழு இருதயத்தோடும் நேசிக்கிறேன். நண்பர்களே, உங்களுக்கு இனி எதுவும் தேவைப்படக்கூடாது. சும்மா... இது வெறும்... நான்-நான்-நான் இதை விளக்க முடியாது. ஓ, உங்களுக்கு என்ன-என்ன தேவை? பரிசுத்த ஆவியானவர் இதற்கு மேல் என்ன செய்ய முடியும்? அங்கே வெறும்... ஓ, இந்தத் தருணத்தில் என்ன நடக்கக்கூடும்? 140 எப்படி இருக்கிறீர்கள், அம்மா? நாம் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள். அப்படித்தானே? எனக்கு உங்களைத் தெரியாது. நான் உங்களைத் தொடர்பு கொள்வதற்கு எனக்குத் தெரிந்த ஒரே வழி தேவன் மட்டுமே. உங்களுக்கு நான் ஊழியம் செய்வதற்கான ஒரே வழி தேவனுடைய இரக்கத்தின் மூலமாக மட்டுமே, நான் வெறும் ஒரு மனிதன். இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள், இல்லையா? ஏனெனில் நீங்கள் ஒரு கிறிஸ்தவர். சமீபத்தில் உங்களுக்கு ஒரு துக்ககரமான செய்தி கிடைத்தது, நீங்கள் குணமடைய முடியாது என்று மருத்துவர் சொன்னார், உங்களுக்கு ஒரு புற்றுநோய் இருந்தது. அது சரிதான். நீங்கள் இந்த நகரத்தைச் சேர்ந்தவர் அல்ல, நீங்கள் நிறைய ஏரிகள் மற்றும் பல காரியங்கள் இருக்கும் ஒரு நிலத்திலிருந்து வந்திருக்கிறீர்கள், விஸ்கான்சின், ஓவன், விஸ்கான்சின். உங்கள் பெயர் ரீகல், உங்கள் முதல் எழுத்துக்கள் எச். எஃப். (H. F.). இப்போது வீட்டிற்குச் செல்லுங்கள், உங்கள் சுகத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்து உங்களைச் சுகமாக்குகிறார். 141 அதைக் குறித்து வருத்தப்பட வேண்டாம்! இயேசு பேதுருவிடம், "நீ பேதுருவாய் இருக்கிறாய், உன் பெயர் பேதுரு எனப்படும்" என்று சொன்னார். 142 அம்மா, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்குப் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கிறது, இல்லையா? சரியாக அங்கே இருக்கும் அந்த அம்மாவுக்கும் அது இருக்கிறது, அந்த அம்மாவுக்குத் தொண்டைக் கழலை நோயும் இருக்கிறது. நீங்கள் இருவரும் சுகமாக்கப்பட்டுவிட்டீர்கள். 143 நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஒரு நிமிடம் எழுந்து நில்லுங்கள், உங்கள் கால்களில் எழுந்து நில்லுங்கள், உங்களுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் எனக்குக் கவலையில்லை, உங்கள் கால்களில் எழுந்து நில்லுங்கள். "நான் இப்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன், இப்போது அவரை என் பரிகாரியாக ஏற்றுக்கொள்கிறேன்." 144 சர்வவல்லமையுள்ள தேவனே, எல்லா வியாதிகளையும் நான் கண்டிக்கிறேன், மற்றும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஒவ்வொரு பிசாசையும் நான் துரத்துகிறேன்! 145 சாத்தானே வெளியே வா! தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக, இந்த மக்களின் மீதான பிசாசின் வல்லமை உடைக்கப்படுவதாக! டாக்டர் மோசே (55-0114) 88